Dr. ஷேக் முபாரக் மதனி

வளமையாக ஃபர்ழான தொழுகைகளுக்கு முன்பின் சுன்னத்துக்களை தொழக்கூடிய ஒருவர் பிரயாணத்தில் இருக்கிறபோது சுன்னத்துக்களை தொழ வேண

சுன்னத் தொழுகை பிரயாணம் கஸர்

← முந்தையஅடுதது →
கேள்வி
வளமையாக ஃபர்ழான தொழுகைகளுக்கு முன்பின் சுன்னத்துக்களை தொழக்கூடிய ஒருவர் பிரயாணத்தில் இருக்கிறபோது சுன்னத்துக்களை தொழ வேண்டுமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் வளமையாக பர்தான தொழுகைகளுக்கு முன்பின் சுன்னத்துக்களை தொழக்கூடிய ஒருவர் பிரயாணத்தில் இருக்கிறபோது என்ன செய்ய வேண்டும் அவர் சுன்னத்துக்களை தொழ வேண்டுமா இல்லையா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [17]. அன்புள்ள சகோதர சகோதரிகளே ஃர்ான தொழுகைகளுக்கு முன்னாலும் பின்னாலுமாக 12 ரக்காத்துக்கள் ஒருவர் வளமையாக தொழுது வருகிற போது அவருக்கு சுவர்க்கத்திலே ஒரு வீடு கட்டப்படுகிறது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் [17]. எனவே இந்த 12 ரக்காத்துக்களையும் பேணி தொழுவதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் [17]. லுஹருக்கு முன்னால் நான்கு ரக்காத்துக்கள் இரண்டு இரண்டாக துஹருக்கு பின்னால் இரண்டு ரக்காத் [17]. அதேபோல மகரிபுக்கு பிறகு இரண்டு ரக் இஷாவுக்கு பிறகு இரண்டு ரக்அத் பஜ்ருக்கு முன்னால் இரண்டு ரக்காத் [17]. இந்த 12 ரக்அத்துக்களையும் நாம் பேணித் தொழுது வந்தால் அல்லாஹ்வுடைய உதவியால் சுவர்க்கத்தில் இதற்காக வென்றே விசேடமான ஒரு வீடு நமக்கு கிடைக்கும் [17].

சில உலமாக்களுடைய கருத்துப்படி ஒவ்வொரு நாளும் இதற்காக வேண்டி ஒவ்வொரு வீடு கட்டப்படுகிறது [18]. என்பதையும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [18]. இந்த சுன்னத்துக்களை ஒருவர் பேணி வருகிறார் என்றால் இவர் பிரயாணத்தில் இருக்கும் போதும் இந்த சுன்னத்தை தொழ வேண்டுமா என்று கேட்டால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரயாணம் செல்லுகிற போது சுபஹுடைய முன் முந்திய இரண்டு ரக்அத்துக்களை மாத்திரமே தொழக்கூடியவர்களாக இருந்தார்கள் [18]. ஏனைய பத்து ரக்அத்துக்களையும் அவர்கள் பிரயாணத்தில் தொழுவதில்லை என்பதை ஸஹீஹான ஹதீஸ்களிலே நாம் பார்க்கிறோம் [18]. எனவே பிரயாணத்தில் இருக்கிற ஒருவர் வளமையாக ஊரில் இருக்கும்போது தொழுது கொண்டு வந்தேன் என்பதற்காக வேண்டி இந்த சுன்னத்துக்களை பிரயாணத்திலும் தொழுவது கூடாது [18]. சுன்னாவுக்கு மாற்றமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [18]. சுபஹுடைய பஜ்ருடைய முந்தி இரண்டு ரக்காத் மாத்திரம்தான் பிரயாணத்தில் தொழப்பட வேண்டும் என்பதை நாம் புரிய வேண்டும் [18].

அதே நேரத்தில் ஊரில் இருக்கும்போது தொழுது பிரயாணத்தில் அவர் அதை விடுகிற போது ஊரில் இருக்கும்போது அவர் தொழுது கொண்டிருந்ததற்கு நன்மை கிடைத்தது போல பிரயாணத்திலும் அதற்கு பூரணமான நன்மை அவருக்கு கிடைக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [19]. வல்லாஹுத்தஆலா ஆலம் [19].

← முந்தையஅடுதது →