Dr. ஷேக் முபாரக் மதனி

துஆ கேட்கும்போது கைகளை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?

துஆ கைகளை உயர்த்துதல் சுன்னத் சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
துஆ கேட்கும்போது கைகளை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும்?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் துஆ கேட்கும்போது கைகளை எவ்வாறு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [13]. அன்புள்ள சகோதர சகோதரிகளே கைகளை உயர்த்தி அல்லாஹ்விடத்தில் துவா செய்தால் அந்த கைகளை வெறுங்கையாக அனுப்புவதற்கு அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள் [13]. இந்த ஹதீஸிலிருந்து துவா கேட்கும்போது கைகளை உயர்த்தி துவா செய்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமூட்டி இருப்பதை பார்க்கிறோம் [13]. அதேபோன்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், பல சந்தர்ப்பங்களில் தன்னுடைய கைகளை உயர்த்தி அல்லாஹ்விடத்திலே துவா கேட்டிருப்பது [13]. பார்க்கிறோம் பொதுவாக துவா கேட்கும்போது கண்டிப்பாக கைகளை உயர்த்திதான் கேட்க வேண்டும் என்கிற நிபந்தனை கிடையாது என்பதையும் இந்த நேரத்தில் நாம் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம் [13].

ஏனென்றால் நிறைய சகோதர சகோதரிகள் நினைக்கிறார்கள் துவா கேட்கும் போதெல்லாம் கைகளை தூக்கித்தான் உயர்த்திதான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் அப்படி கிடையாது கைகளை உயர்த்தாமலும் துவா கேட்கலாம் [14]. ஆனால் கைகளை உயர்த்தி கேட்பது என்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்த ஒரு மிக முக்கியமான வழிமுறை என்பதையும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [14]. அவ்வாறு நாம் துவா கேட்கிற போது பொதுவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகிறார்கள் உங்களுடைய கைகளின் உள்பகுதிகளால் அல்லாஹ்விடத்திலே கேளுங்கள் என்று சொல்கிறார்கள் [14]. இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் பார்க்கும்போது கைகளை இவ்வாறு உயர்த்திக் கொள்ள வேண்டும் [14].

உலமாக்கள் இந்த ஹதீஸ்கள் துவாவில் கை தூக்குவது கையை உயர்த்துவது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸ்களை எல்லாம் ஒன்று சேர்த்து அதை பற்றி விளக்கப்படுத்துகிற நேரத்தில் சொல்கிறார்கள் விரல்களை சேர்த்து கொள்ள வேண்டும் அதேபோன்று கைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் நெஞ்சுக்கு நேரே கைகளை வைத்து கொள்ள வேண்டும் சில நேரங்களில் இவ்வாறு முகத்தை நோக்கியதாக வைப்பதில் குற்றமில்லை அதேபோன்று சற்று உயர்த்தி தோல் புஜம் வரைக்கும் கையை தூக்குவதிலும் தவறில்லை என்பதை உலமாக்கள் தெளிவுப்படுத்துகிறார்கள் எனவே இதனுடைய பூரணமான வடிவம் என்பது கைகள் இரண்டு கைகளையும் விரல்களை நெருக்கமாக வைத்து கைகள் இரண்டையும் சேர்த்து கொண்டு உள்ளங்கைகள் வானத்தை நோக்கியதாக வைத்து கொள்ள வேண்டும் [15]. நெஞ்சுக்கு நேரே கைகளை வைத்துக் கொள்ள வேண்டும் இதுதான் பூரணமான வடிவமாகும் சில நேரங்களில் முகத்திற்கு நேரே இவ்வாறு கையை வைத்துக் கொள்வதில் தவறில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [15].

சிலர் துவா கேட்கும்போது தங்களுடைய கைகளை இவ்வாறு உயர்த்திக் கொள்வார்கள் இவ்வாறு செய்வது என்பது கெஞ்சி மன்றாடுகிற ஒரு சந்தர்ப்பம் ல் தான் அவ்வாறு செய்வது மார்க்கத்தில் நமக்கு காட்டி தரப்பட்டிருக்கிறது பொதுவாக துவா கேட்கும்போது கைகளை இவ்வாறு வைத்து கொள்வதுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு காட்டி தந்த வழிமுறையாகும் வல்லாஹுத்தஆலா ஆலம் [16].

← முந்தையஅடுதது →