அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை இந்நிலையில் என் தந்தை என்னை தவறாக பார்க்கிறார் [11]. இதனால் என் மனநிலை ரொம்ப மோசமாக உள்ளது நான் நான் என்ன செய்வது என்று ஒரு சகோதரி கேட்கிறார் [11]. உண்மையிலேயே அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த நிலை நாம் எல்லோருமே வருத்தப்பட வேண்டிய கவலைப்பட வேண்டிய ஒரு நிலையாகும் [11]. ஒரு தந்தை தன்னுடைய மகளை புனிதமாக பார்க்க வேண்டிய நிலையில் மகளையே தவறாக பார்க்கிற நிலை உருவாகி இருக்கிறது என்று சொன்னால் இது சைத்தானுடைய மிகப்பெரிய தூண்டுதலும் காலத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய மிகப்பெரிய மாற்றமும் ஆகும் [11]. உண்மையிலே இஸ்லாம் எந்த அளவுக்கு வலியுறுத்துகிறது என்றால் அந்நிய ஆண்களையும் அந்நிய பெண்களையும் பார்க்காமல் பார்வைகளை தாழ்த்தி கொண்டு செல்ல வேண்டும் என்று மூமினான ஆண்களுக்கும் பெண்களுக்கும் அல்குர்ஆன் கட்டளையிடுகிறது [11]. ஒரு அந்நிய பெண்ணோடு தனித்திருப்பது கூடாது என்று இஸ்லாம் சொல்லுகிறது [11]. இப்படியான சூழ்நிலையில் மஹரமான உறவுகளில் மிகப் புனிதமான உறவு தாய் அதற்கு அடுத்தது மகள் [11].
இந்த உறவுகள் கலங்கப்படுத்தப்படுவது என்பது சைத்தானுடைய மிகப்பெரிய ஒரு சதித்ததிட்டமாகும் [12]. ஈமான் உள்ளங்களிலே பலவீனம் அடைந்து, ஜாஹிலியத்துகளும், இச்சைகளும், உள்ளத்தை ஆட்கொள்ளுகிற போது, இந்த சூழ்நிலை உருவாகிறது [12]. அல்லாஹ் இந்த நிலையிலிருந்து, நம்முடைய சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் எல்லோரும், துவா செய்து கொள்ள வேண்டும் [12]. இந்த சகோதரியை பொறுத்தவரையில் தன்னுடைய தந்தை பார்க்கிறார் அந்த பார்வை தப்பாக இருக்கிறது அல்லது தொடுகிறார் அந்த தொடுகை தப்பாக இருக்கிறது என்றால் தந்தையிடத்திலே அதை நேரடியாக அவர் சொல்ல வேண்டும் [12]. இது தவறு என்பதை தந்தைக்கு உணர்த்த வேண்டும் [12]. அதேபோன்று தன்னுடைய தாயின் மூலமும் இதை அவருக்கு சுட்டி காட்ட வேண்டும் [12]. அதே நேரத்தில் திருமணம் முடிக்கக்கூடிய வயதை உடையவராக அவர் இருந்த ந்தால் அவசரமாக திருமணம் முடித்துக் கொள்வது இந்த பிழையான வழிமுறையில்ிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்குரிய சிறந்த வழியாகும் அல்லாஹுத்தஆலா இப்படியான பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பை கொடுப்பானாக இவ்வாறான அரக்கத்தனமான சிந்தனை உள்ள தந்தைகளுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பானாக ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் [12].