அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத வழி இல்லாமல் திருமணம் செய்தால் அந்த திருமணம் நிறைவேறுமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [8]. அன்புள்ள சகோதர சகோதரிகளே திருமணம் நிறைவேறுவதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன [8]. அதிலே பிரதானமான ஒன்றுதான் மணமக்களுடைய மணமகன் மணமகளாகிய விருப்பம் [8]. இரண்டாவதாக பெண்ணுடைய பொறுப்பாளராக இருக்கக்கூடிய வலியுடைய அனுமதி [8]. மூன்றாவதாக இரண்டு சாட்சிகள் [8]. இந்த மூன்று விஷயங்களோடு சேர்த்து அல்ஈஜாப் வல் கபூல் என்று சொல்லக்கூடிய மண மகளுடைய பொறுப்பாளர் வலி தான் திருமணம் முடித்து கொடுப்பதாக பிரகடனப்படுத்துவது அதை மனமாக ஏற்றுக்கொள்வது இவை திருமணத்தின் மிக முக்கியமான நிபந்தனைகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன இதிலே வலி என்பது திருமணம் நிறைவேறுவதற்குரிய மிக முக்கியமான ஒரு கண்டிஷன் ஆகும் ஒரு ஷர்த்தாகும் இமாம் ஹனீபா ரஹிமுஹுல்லாஹ் தவிர உள்ள ஏனைய எல்லா இமாம்களும் வலி திருமணத்திற்கு நிபந்தனை என்பதை வலியுறுத்துகிறார்கள் [8].
இந்த பெரும்பாலான உலமாக்களுடைய கருத்துதான் மிகவும் சரியானதாகவும் ஆதாரத்தோடு இருக்கக்கூடியதாகவும் காணப்படுகிறது [9]. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் லாநிக்காஹ இல்லாபிலி வலி இல்லாமல் திருமணம் இல்லை என்று சொன்னார்கள் அதேபோல் போல ஐயுமம் இனிவலி பாத்தில் பாத்தில் பாத்தில் என்று சொன்னார்கள் ஒரு பெண் தன்னுடைய வலியினுடைய அனுமதி இல்லாமல் திருமணம் செய்தால் அந்த திருமணம் நிறைவேறாது அது பாத்திலானது என்று மூன்று தடவை சொன்னார்கள் எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே வழியில்லாமல் திருமணம் செய்தால் அந்த திருமணம் நிறைவேற மாட்டாது என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது [9]. அதே நேரத்தில் சில இடங்களிலே சில சூழ்நிலைகள் வரும் வலி இருக்க மாட்டார் [9]. அப்படியான சூழ்நிலைகளில் யார் வலியாக இருப்பது [9]. உதாரணமாக ஒரு சகோதரி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார் அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு முஸ்லிம்களோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார் [9]. அவருக்கு யார் வழியாகுவது அல்லது சில நேரங்களில் வேறு நாடுகளிலே போய் குடியேறி இருப்பார்கள் [9].
அங்கே வழி இல்லாமல் திருமணம் செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும் இந்த நேரத்தில் யார் வலியாக இருப்பது என்பதை பொறுத்தவரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் சொன்னார்கள் சுல்தான் வலியுமல்ல வலியலஹு வலி இல்லாதவருக்கு சுல்தான் வழியாக கருதப்படுவார் என்று சொன்னார்கள் அதாவது சுல்தான் என்றால் ஆட்சியாளர் பொறுப்பாளர் வழியாக அமைவார் அந்த அடிப்படையில் உலமாக்கள் சொல்கிறார்கள் இப்படியான ஒரு சூழ்நிலை உருவானால் உண்மையிலேே அந்த பெண்ணுக்கு ஒரு வலி இல்லாத ஒரு சூழ்ிலை காணப்பட்டால் அந்த நேரத்தில் ஒன்றில் ஆட்சியாளர் பொறுப்பாக்கி இருக்கக்கூடிய காதி நீதிபதி வழியாக இருப்பார் [10]. அப்படி காதிகள் இல்லாத நாடுகளாக இருந்தால் அந்த நாடுகளில் இருக்கிற ஜமாத்துகளினுடைய தலைவர்கள் அல்லது மர்க்கஸுடைய தலைவர்கள் காதியாக இருந்து அல்லது வலியாக இருந்து அந்த திருமணத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் [10]. அப்படியும் யாரும் இல்லை என்றால் ஒரு மஸ்ஜிதினுடைய தலைவர் வர் காதியாக இருந்து அந்த வழியாக இருந்து அந்த திருமணத்தை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்ற கருத்தை உலமாக்கள் கூறியிருக்கிறார்கள் வல்லாஹுத்தஆலா ஆலம் [10].