அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத திருமண ஒப்பந்தம் முடிந்ததும் வலிமா கொடுப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றா என்கிற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [6]. அன்புள்ள சகோதர சகோதரிகளே திருமணம் முடிக்கக்கூடிய ஒரு மணமகன் திருமணத்தை தொடர்ந்து வலிமா கொடுப்பது என்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும் [6]. இந்த வலிமாவை எப்போது கொடுக்க வேண்டும் அதாவது திருமண ஒப்பந்தம் முடிந்தவுடன் கொடுப்பதா? அல்லது கணவனும் மனைவியும் சேருகிற போது கொடுப்பதா அல்லது சேர்ந்த பிறகு கொடுப்பதா என்ற விஷயத்தில் அறிஞர் பெருமக்கள் மத்தியிலே கருத்து வேறுபாடுகள் காணப்படுவதை நாம் அவதானிக்க முடிகிறது [6]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மனைவியோடு சேர்ந்த பிறகு வலிமா கொடுத்திருக்கிறார்கள் என்பதை சபியா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய திருமண வலிமா சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ் பார்க்கிற போது நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது [6]. எனவே திருமணம் முடித்து கணவனும் மனைவியும் சேர்ந்த பிறகு வலிமா கொடுப்பதே மிகவும் சிறந்தது என்பதை இந்த ஹதீஸ்களில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம் [6].
இருந்தாலும் கூட ஷேக் பவஜான் இதுபோன்ற இன்னும் பல அறிஞர்கள் இந்த திருமண ஒப்பந்தம் நிறைவேறிய பிறகும் சேர்வதற்கு முன்னால் வலிமா கொடுக்கலாம் என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள் [7]. அதாவது இதிலே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலிமாவுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை வலியுறுத்தாத காரணத்தினால் அல்லது வரையறை செய்யாத காரணத்தினால் திருமண ஒப்பந்தம் முடிந்துவிட்டால் திருமணம் நிறைவேறுகிறது என்கிற அடிப்படையில் ஒருவர் திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றி விட்டு வலிமா கொடுக்க விரும்பினால் அது அவருடைய விருப்பத்தை பொறுத்தது அது அங்கீகரிக்கப்பட்ட வலிமாவாக கருதப்படும் [7]. இருந்தாலும் இரண்டு பேரும் கணவனும் மனைவியும் குடும்ப வாழ்க்கையில் சேர்ந்த பிறகு வலிமா கொடுப்பதே சிறந்தது என்கிற விஷயத்தை நாம் புரிந்து கொள்ள முடிகிறது வல்லாஹுத்தஆலா ஆலம் [7].