அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் திக்குவாய் உள்ள எனக்கு ஓதுவதற்கு ஏதாவது துஆ இருக்கிறதா என்று ஒரு சகோதரர் கேட்டிருக்கிறார் [3]. அன்புள்ள சகோதர சகோதரிகளே அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா மனிதர்களை படைக்கிற போது பூரணமான வடிவத்தில் அவர்களை படைத்திருப்பதாக அல்குர்ஆனலே சொல்கிறான் லக்கதுஹலனல் இன்சானதம் நிச்சயமாக நாம் மனிதனை அழகிய வடிவத்தில் படைத்திருக்கிறோம் என்று அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான் இருந்தாலும் கூட அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா சோதிப்பதற்காக வேண்டி சில குறைபாடுகளை சிலருக்கு ஏற்படு த்துகிறான் அவ்வாறு ஏற்படுத்தப்படக்கூடிய குறைபாடுகளிலே ஒன்றுதான் சிலருக்கு அரவே பேச்சு வராமல் இருப்பது என்பது இன்னும் சிலருக்கு பேசுகிற போது ப்ளோவாக சரளமாக பேச முடியாமல் திக்குத்தி திக்கி பேசக்கூடிய நிலையை ஏற்படுத்துவது [3]. இதிலே பிறப்பிலே ஏற்பட்ட பேச முடியாத நிலையை பொறுத்தவரையில் அதை குணப்படுத்துவது என்பது ஒரு கஷ்டமான காரியமாகும் [3]. ஆனால் திக்குவாயை பொறுத்தவரையில் இதை பயிற்சிகளின் மூலம் மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன [3].
இன்று மருத்துவ உலகத்திலே இவ்வாறு திக்குவாயோடு இருந்த நிறைய பேர் பயிற்சிகளின் மூலமும் சில மருந்துகளின் மூலமும் குணமாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிகிறோம் [4]. எனவே கேள்வி கேட்டிருக்கிற இந்த சகோதரரோ அல்லது இது போன்ற பிரச்சினை உள்ள ஏனையவர்கள் இது சம்பந்தமான அறிவுள்ள மருத்துவர்களை நாடி அதற்குரிய ஆலோசனைகளை பெறுவது என்பது மிக முக்கியமான ஒன்றாகும் [4]. குறிப்பாக ஸ்பீச் தெரப்பி என்ற ஒன்று இருக்கிறது [4]. அதை பின்பற்றுகிற போது நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவியால் இவ்வாறான நிலைகளை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை நாம் ஆரம்பத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறோம் [4].
அடுத்ததாக இவ்வாறு இருக்கக்கூடியவர்கள் ஓதுவதற்கு என்று ஏதாவது துவா இருக்கிறதா என்று கேட்டால் நாம் அறிந்த வரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் இதற்காக வேண்டி எந்த ஒரு துவாவையும் கற்று தந்ததாக நாம் காணவில்லை ஆனால் பொதுவாக ரிப்பிஷர சதரி யலி அம்ரிலிசானி எவலி என்று வரக்கூடிய அந்த துவாவை இவ்வாறான விஷயங்களுக்காக ஒருவர் ஓதுவதாக இருந்தால் அதில் தடையும் இல்லை அது மார்க்கம் அனுமதித்த ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவே கேள்வி கேட்ட சகோதரர் அல்லாஹ்விடத்திலே பொதுவாக துவா செய்யுங்கள் அதே நேரத்தில் நீங்கள் விரும்பினால் ரிப்பிசரி அம்ிசானிலி என்கிற குர்ஆனில் வரக்கூடிய இந்த துவாவையும் நீங்கள் ஓதிக்கொள்ளலாம் வல்லாஹுத்தஆலாம் [5].