அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் ரசூலில்லாம் ஸலாம் சொல்வதை பொறுத்தவரையில் இஸ்லாம் ஆர்வமூட்டக்கூடிய பல நன்மைகளை அடையாளப்படுத்தக்கூடிய ஒரு இபாதத்தாக காணப்படுகிறது [14]. சலாம் சொல்வதன் முழு ஒழுங்குகளையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள் [14]. அந்த அடிப்படையில் தொழுது கொண்டிருக்கக்கூடிய ஒருவரை பார்த்து ஸலாம் சொல்லப்பட்டால், அவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்பதற்கும், அல்லாஹ்வுடைய தூதர், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வழிகாட்டி இருக்கிறார்கள் [14]. ஒரு நாள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது, ஒருவர் ஸலாம் சொல்லுகிறார் [14]. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவருக்கு வலைக்கும்ஸலாம் என்று வாயினால் பதில் சொல்லவில்லை [14]. மாறாக, தன்னுடைய தக்பீர் கட்டிக் கொண்டிருந்தவர்கள் தன்னுடைய கையை இவ்வாறு காட்டினார்கள் [14]. அதாவது இந்த கீழ் பகுதி உள்ளங்கை, கீழ் நோக்கியதாகவும், புறங்கை மேல் நோக்கியதாகவும் இருக்கக்கூடியதாக இவ்வாறு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய கையை தூக்கி, காட்டினார்கள் எனவே சலாம் ஒருவர் நாம் தொழுது கொண்டிருக்கும் போது நமக்கு சொன்னால் அவருக்கு பதில் சொல்ல விரும்பினால் இந்த முறையை கடைபிடிப்பது சுன்னாவாக இருந்து கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் தொழுது கொண்டிருக்கக்கூடிய ஒருவர் எக்காரணம் கொண்டும் வாயால் பதில் சொல்வது கூடாது வல்லாஹுத்தஆலா ஆலம் [14].
கேள்வி
தொழுது கொண்டிருக்கும் போது ஒருவர் ஸலாம் சொன்னால் நாம் எவ்வாறு பதில் சொல்வது?
பதில்
பதில்: