Dr. ஷேக் முபாரக் மதனி

குடும்ப வாழ்க்கையில் (தாம்பத்தியத்தில்) ஈடுபட்டு இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிக்க வேண்டுமா?

தாம்பத்தியம் குளிப்பு கடமையான குளிப்பு இந்திரியம்

← முந்தையஅடுதது →
கேள்வி
குடும்ப வாழ்க்கையில் (தாம்பத்தியத்தில்) ஈடுபட்டு இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிக்க வேண்டுமா?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திரியம் வெளியாகாவிட்டால் குளிக்க வேண்டுமா என்று கேட்கிறார்கள் [23]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த கேள்வியை பொறுத்தவரையில் இரண்டு பகுதிகள் இதிலே இருக்கின்றன [23]. ஒன்று மனைவியோடு தாம்பத்தியம் தவிர ஏனைய சுகங்களை ஒருவர் அனுபவித்து இந்திரியம் வெளியாகாத நிலை இருக்குமாக இருந்தால் அவர் குளிக்க வேண்டிய அவசியம் கிடையாது மனைவியோடு தாம்பத்தியம் தவிர ஏனைய உறவுகளை அவர் கொள்கிறார் அவருக்கு இந்திரியம் வெளியாகவில்லை [23]. இந்த நேரத்தில் அவர் குளிக்க தேவையில்லை அவர் மீது குளிப்பு கடமையாகவில்லை [23]. இரண்டாவதாக ஒரு மனிதர் தாம்பத்தியத்தில் ஈடுபடுகிறார் [23]. தாம்பத்தியத்தில் ஈடுபட்டு அவருடைய பிரைவேட் பாட்டும் தன்னுடைய மனைவியினுடைய அந்தரங்க உறுப்பும் சந்தித்து விடுமாக இருந்தால் இந்திரியம் வெளியாகா விட்டாலும் குளிக்க வேண்டும் என்பதுதான் [23]. தான் இமாம்கள் அனைவரதும் ஏகோபித்த முடிவாக இருக்கிறது என்பதை இமாம் இப்னு குஜாமா ரஹிமுஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய அல் முகனி என்ற நூலிலே குறிப்பிடுகிறார்கள் [23].

இதற்கு புகாரி முஸ்லிமிலே பதிவு செய்யப்பட்டிருக்கிற ஒரு ஹதீஸை ஆதாரம் காட்டுகிறார்கள் [24]. அதிலே வருகிறது ஒரு மனிதர் தன்னுடைய மனைவியோடு தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் குளிப்பு கடமையாகிறது என்று வருகிறது முஸ்லிம்லே வரக்கூடிய ரிவாயத்திலே இந்திரியம் யாகவிட்டாலும் என்று தெளிவாகவே வருகிறது எனவே தாம்பத்தியத்தில் ஈடுபட்டு இந்திரியம் வெளியாகாமல் போனாலும் அவர் கட்டாயம் குளிக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் வல்லாஹுத்தஆலா ஆலம் [24].

← முந்தையஅடுதது →