அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத தவளையை கொலை செய்யலாமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [20]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த கேள்வி கேட்கப்படுவதற்கு இது தொடர்பாக வரக்கூடிய ஒரு ஹதீஸ் அல்லது சில ஹதீஸ்களை இந்த சகோதரர் வாசித்திருக்கலாம் என்று எண்ணுகிறேன் [20]. அதாவது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே ஒரு வைத்தியர் வந்து கேட்கிறார் [20]. அல்லாஹ்வுடைய தூதரே நான் தவளைகளை கொலை செய்து என்னுடைய மருத்துவத்தில் பயன்படுத்த விரும்புகிறேன் [20]. இதற்கு அனுமதி உண்டா? என்று கேட்டபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வேண்டாம் [20]. அப்படி செய்யாதே என்று அவரை தடை செய்தார்கள் என்கிற செய்தியை துணன் அபிதாவூத் என்கிற ஹதீஸ் நூல்ல நாம் பார்க்கிறோம் [20]. இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஹதீஸ் என்று ஷேக் நாசருத்தீன் அல்பானி ரஹிமுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள் [20]. எனவே மருத்துவத்திற்காக வேண்டிய தவளையை கொலை செய்யக்கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கே கூறியிருப்பதிலிருந்து பொதுவாக தவளைகளை கொலை செய்வது கூடாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [20].
அதே நேரத்திலே தபரானி அதேபோன்று பைஹக்கி போன்ற ஹதீஸ் கிரந்தங்களிலே ஒரு செய்தி வருகிறது [21]. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தவளைகளை கொலை செய்வதை தடை செய்தார்கள் [21]. ஏனென்றால், தவளை போடக்கூடிய அந்த சத்தம் தஸ்பீஹாகும் [21]. என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என்று வருகிறது [21]. ஆனால், இந்த ஹதீஸ் சஹீஹானதா, இல்லையா என்பதிலே, அறிஞர்கள் மத்தியிலே, கருத்து வேறுபாடு இருக்கிறது [21]. ஷேக் நாசருதீன் அல்பானி ரஹிமல்லாஹ் அவர்கள், இந்த ஹதீஸ் பலவீனமான ஹதீஸ் என்று குறிப்பிடுகிறார்கள் [21]. எனவே நாம் இதற்குரிய இல்ல, அதாவது தவளையை கொல்லக்கூடாது என்பதற்கு காரணம் அதனுடைய சத்தம் தஸ்பீ என்ற காரணத்தை சொல்ல முடியாது அதே நேரத்தில் தவளையை கொலை செய்வது கூடாது என்பதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம் [21]. அதே நேரத்தில் உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் ஒரு மனிதனுக்கு தவளை தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு சூழல் வருமாக இருந்தால் அந்த நேரத்தில் மனிதனுடைய நன்மைதான் முன்னிலைப்படுத்தப்படும் [21].
எனவே அப்படியான ஒரு சூழ்நிலை தவளையை கொள்வது குற்றமில்லை என்பதையும் உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் எனவே நிலைமைகளையும் சந்தர்ப்பத்தையும் வைத்து அந்த முடிவை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் பொதுப்படையாக தவளைகளை கொலை செய்வது கூடாது வல்லாஹுத்தஆலா ஆலம் [22].