அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத ஒருவர் தனது மனைவியை தலாக் சொல்லிவிட்டால் குழந்தை யாரோடு சேர்க்கப்பட வேண்டும் என் என்று கேட்கிறார்கள் [16]. அதாவது கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது குழந்தைகள் பெற்று வாழ்ந்த கணவனும் மனைவியும் தலாக் சொல்லி இரண்டு பேரும் பிரிந்து விடுவார்களாக இருந்தால் இருக்கிற குழந்தைகள் யாரோடு வாழ்வது என்பதை பொறுத்தவரையில் இதிலே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஒரு அழகான, தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் [16]. முஸ்னத் அஹ்மத், ஹாக்கிம் போன்ற, ஹதீஸ் நூல்களிலே பதிவு செய்யப்பட்ட, ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ் [16]. ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யா ரசூலல்லாஹ் என்னுடைய இந்த மகன் என்னுடைய வயிற்றில் வளர்ந்து பிறகு என்னுடைய மடியில் வளர்ந்து நான் அவனுக்கு பாலூட்டி வளர்த்தேன் [16]. இப்போது என்னுடைய கணவர் என்னிடமிருந்து அந்த குழந்தையை பிரித்துக் கொண்டு செல்ல விரும்புகிறார் என்று சொன்னபோது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸல்லம் அவர்கள் சொன்னார்கள் அன்ி அஹிமா மாலம்தன் கஹி நீ வேறொருவரை திருமணம் செய்கிற வரைக்கும் இந்த குழந்தை உன்னிடமே இருக்க வேண்டும் அதை பராமரிப்பதற்கு நீயே மிக அருகதை உள்ளவள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் [16, 17].
இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து தலாக் சொல்லப்பட்ட பெண்தான் குழந்தைகளுக்கு பொறுப்பானவள் என்ற கருத்தை இமாம்கள் அனைவரும் ஏகோபித்த நிலையில் முன்வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும் [17]. எதுவரை அந்த பிள்ளை அந்த பெண்ணிடம் இருக்கும் என்றால் அவள் திருமணம் முடிக்கிற வரைக்கும் திருமணம் முடித்துவிட்டால் அந்த குழந்தையை பராமரிக்கிற பொறுப்பு யாருக்கு செல்லும் என்பதிலே இமாம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரும்பாலான இமாம்களுடைய தீர்ப்பு என்னவென்றால் அந்த குழந்தை அந்த பெண்ணினுடைய தாயிடத்தில் தான் செல்ல வேண்டும் கணவனிடத்தில் அல்ல என்று சொல்கிறார்கள் [17]. இதுதான் பெரும்பாலான அறிஞர்களுடைய நிலைப்பாடு என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [17]. அந்த பெண் திருமணம் முடிக்காமல் இருந்தால் சின்னுதமீஸ் என்கிற வயது வரைக்கும் தான் குழந்தை பராமரிப்பு அந்த பெண்ணிட இருக்கும் சின்னுதமீஸ் என்கிற வயதை அந்த குழந்தை அடைந்துவிட்டால் அதற்குப் பிறகு அந்த குழந்தை தாயிடம் இருப்பதா தந்தையிடம் இருப்பதா என்பதை குழந்தை முடிவெடுக்க வேண்டும் என்று உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் சின்னுதமீஸ் என்பது எந்த வயது என்பதிலே கருத்து வேறுபாடு கடுமையாக காணப்படுகிறது [17, 18].
இதிலே பெரும்பாலான அறிஞர்கள் சொல்லக்கூடிய கருத்து ஏழு வயது என்பது [18]. அப்ப ஒரு குழந்தை ஏழு வயதை அடைந்துவிட்டால் அந்த குழந்தை தீர்மானித்துக் கொள்ளலாம் தந்தையோடு இருப்பதா அல்லது தாயோடு இருப்பதா என்பதை இதை பொறுத்தவரையில் திருமதியிலே பதிவு செய்யப்பட்ட ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சிறுவனை இவ்வாறு நீ தாயோடு இருக்க போகிறாயா அல்லது தந்தையோடு இருக்க போகிறாயா என்று தேர்வு செய்கிற உரிமையை அந்த சிறுவனுக்கு கொடுத்தார்கள் என்று வருகிறது அதேபோல இன்னும் ஒரு சஹீஹான ஹதீஸ் ஒரு பெண்மணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து என்னுடைய கணவர் என்னுடைய பிள்ளை என்னிடமிருந்து பிரிக்க பார்க்கிறார் என்று சொன்னபோது கணவன் வந்து என்னுடைய பிள்ளை என்று வாதாடிக் கொண்டிருக்கிறார் இவர்கள் இரண்டு பேரையும் வைத்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸல்லம் அவர்கள் அந்த குழந்தையிடம் சொல்லுகிறார்கள் ஹத அபூக்க வஹதி உம்முக் இது உன்னுடைய தந்தை இது உன்னுடைய தாய் பியதி இவர்களில் யாரை நீ விரும்புகிறாயோ அவருடைய கையை பிடித்துக்கொள் என்று சொன்னபோது அந்த குழந்தை தாயினுடைய கையை பிடித்து சென்றது என்று இந்த ஹதீஸில் இடம் பெறுகிறது இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று இமாம் திருமதி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் [18, 19].
எனவே சின்னுமீ அடைந்த பிறகு அதாவது ஏழு வயதைத் தாண்டிய பிறகு குழந்தையை அழைத்து அதாவது காவி நீதி வழங்கக் கூடியவர் நீ தாயுடன் இருக்க போகிறாயா அல்லது தந்தையுடன் இருக்க போகிறாயா என்று கேட்பார் [19]. அந்த பிள்ளை யாருடன் இருக்க விரும்புகிறதோ அவரோடு அந்த குழந்தை சேர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுதான் பெரும்பாலான உலமாக்களுடைய தீர்ப்பாக இருக்கிறது வல்லாஹுத்தஆலா ஆலம் [19].