Dr. ஷேக் முபாரக் மதனி

தலாக் சொல்லப்பட்டால் கணவன் மனைவி உறவு எப்போது முடிவடையும்? தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண் தலாக் சொன்ன கணவனோடு எவ்வாறான உறவை

தலாக் இத்தா கணவன் மனைவி உறவு திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
தலாக் சொல்லப்பட்டால் கணவன் மனைவி உறவு எப்போது முடிவடையும்? தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண் தலாக் சொன்ன கணவனோடு எவ்வாறான உறவை பேண வேண்டும்?
பதில்
பதில்:

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபாத் தலாக் சொல்லப்பட்ட ஒரு பெண் தலாக் சொன்ன கணவனோடு எவ்வாறான உறவை பேண வேண்டும் அவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் உள்ள கணவன் மனைவி என்ற உறவு எப்போது முடிவடையும் என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [11]. அன்புள்ள சகோதர சகோதரிகளே குடும்ப வாழ்க்கை என்பது இஸ்லாத்தில் ஒரு இபாதத்தாக கருதப்படுகிறது [11]. இந்த குடும்ப வாழ்க்கையின் நோக்கமே கணவன் மனைவி நல்ல முறையில் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் என்பதுதான் [11]. கணவன் மனைவிக்குிடையிலே பிரச்சனைகள் ஏற்படுகிற போது அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து அந்த பிரச்சினையை தீர்த்து கொள்ள முயற்சிய வேண்டும் [11]. அதேபோல இரண்டு பேருடைய குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் இந்த பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது [11]. இவ்வாறான முயற்சிகளையும் தாண்டி கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ முடியாத ஒரு நிலை பெறுகிற போது அவர்கள் விவாகரத்து செய்வதற்கு இஸ்லாத்திலே அனுமதி தரப்படுகிறது [11]. இந்த விவாகரத்து தலாக் என்பதைக் கூட எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற பாணியில் செய்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை [12].

அதற்கென்று நிறைய வரையறைகளையும் சட்டங்களையும் இஸ்லாம் இட்டிருப்பதை நாம் கவனிக்க கடமைப்பட்டிருக்கிறோம் [12]. ஒரு கணவன் தன்னுடைய மனைவியை தலாக் சொல்கிற போது அவள் மாதவிடாயில்ிருந்து சுத்தமானவளாகவும் அதே நேரத்தில் கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தில் ஈடுபடாத நிலையிலும் தலாக் சொல்லப்பட வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது [12]. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் சுத்தமாக இருக்கிறாள் தாம்பத்தியத்தில் இரண்டு பேரும் ஈடுபடவில்லை இந்த நிலையில் கணவன் மனைவியை தலாக் சொல்லிவிட்டால் அந்த மனைவி இத்தா இருக்க வேண்டும் என்று அல்குர்ஆன் கட்டளையிடுகிறது வல் முத்தல்லரஸ் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று குருகள் இத்தா இருக்க வேண்டும் காத்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான் [12]. மூன்று குருகள் என்பதிலே உலமாக்கள் மத்தியிலே குரு என்றால் என்ன என்ற கருத்து வேறுபாடு இருந்தாலும் பெரும்பாலான உலமாக்கள் குரு என்பது மாதவிடாய் என்று கூறுகிறார்கள் [12]. மூன்று மாதவிடாய்கள் அந்த பெண் இத்தா இருக்க வேண்டும் [12].

அதாவது சுத்தமான நிலையில் தலாக் சொல்லப்பட்டிருக்கிறார் [13]. மீண்டும் மாதவிடாய் வரும் [13]. அதற்குப் பிறகு சுத்தமாகுவார் [13]. அதற்குப் பிறகு ஒரு மாதவிடாய் வரும் அதற்குப் பிறகு சுத்தமாகுவார் [13]. அதற்குப் பிறகு மாதவிடாய் வரும் அதோடு இத்தா முடிந்துவிடும் [13]. இதுதான் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்குரிய இத்தா நடைமுறை என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [13]. இந்த இத்தா உடைய காலப்பகுதியில் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ விரும்பினால் அதற்கு எந்த பார்மலிட்டிசும் கிடையாது [13]. இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து விடலாம் [13]. தடையில்லை இதை தலாக் ரஜி என்று ிலே அழைப்பார்கள் [13]. அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து விடலாம் [13]. ஆனால் இரண்டு பேரும் இந்த காலப்பகுதியிலே அதாவது இத்தாவுடைய காலப்பகுதியிலே கணவன் மனைவி என் எகிற நிலையிலேயே இருப்பார்கள் என்பதையும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [13]. எனவேதான் இத்தா இருக்கிற போது கணவன் மௌத்தாகிவிட்டால் தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா இருக்கிற போது கணவன் மௌத்தாகிவிட்டால் அந்த கணவனுக்காக வேண்டி கணவன் மரணித்த இத்தா இருப்பது அந்த மனைவியின் மீது கடமையாகும் [13].

நான்கு மாதங்களும் 10 நாட்களும் அதேபோல இந்த கணவனுடைய சொத்திலிருந்து மனைவிக்கு சேர வேண்டிய பங்கும் சேர்ந்துவிடும் என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [14]. இந்த மூன்று குருகள் இத்தா இருந்து அதற்கிடையில் இவர்கள் சேர்ந்து கொள்ளவில்லை என்று சொன்னால் அவர்களுடைய கணவன் மனைவி என்கிற உறவு முறிந்துவிடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [14]. ஒரு கணவன் ஒரு பெண்ணை தலாக் சொல்கிறாள் சொல்லி அந்த மூன்று குருகள் இத்தா இருந்து அந்த பீரியட் இத்தாவுடைய காலமும் முடிந்துவிட்டது என்று சொன்னால் இவர்கள் இரண்டு பேருக்கும் இடையில் உள்ள கணவன் மனைவி என்கிற உறவு முறிந்துவிடும் [14]. இதற்கு பிறகு இவர்கள் சேர்ந்து வாழ விரும்பினால் இவர்கள் புதிதாக திருமண ஒப்பந்தம் செய்ய வேண்டும் மகர் கொடுக்க வேண்டும் சாட்சிகள் இருக்க வேண்டும் வலி தேவை புதிய ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இவர்கள் சேரலாம் இதுதான் தலாக் ரஜினுடைய சட்டமாக இருந்து கொண்டிருக்கிறது [14]. அதே நேரத்தில் தலாக் பாயின் என்ற ஒன்று இருக்கிறது [14]. அதாவது கணவன் மூன்று தடவைகள் தலாக் சொல்லிவிடுவது [14].

மூன்று தடவைகள் தலாக் சொல்லி விடுவாராக இருந்தால் அதற்குப் பிறகு அவர்கள் கணவன் மனைவி என்கிற நிலையை இழக்கிற அதே நேரத்தில் அந்த மனைவியை அவர் திருமணம் முடிக்க முடியாது [15]. திருமணம் முடிப்பதாக இருந்தால் அந்த பெண் வேறொருவரை திருமணம் முடித்து அவர் மூலம் தலாக் இடம் பெற்று அல்லது அவர் மரணித்த பிறகுதான் இவரை முடிக்கலாம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [15]. எனவே ஒரு கணவன் மனைவிக்குிடையில் உள்ள உறவு என்பது அவர்கள் தலாக் சொன்ன பிறகு இத்தா இருக்கும் காலத்திற்குள் மாத்திரம்தான் இருக்கிறது [15]. இத்தா முடிவடைந்து விடுமாக இருந்தால் அவர்களுக்கு இடையில் உள்ள கணவன் மனைவி என்கிற உறவு முறிந்துவிடும் [15]. அதற்குப் பிறகு அவர்கள் அந்த பழைய உரிமையோடு இருக்க முடியாது [15]. இன்னாருடைய மனைவி இன்னார் என்று சொல்லவும் முடியாது [15]. அவர்கள் இரண்டு பேரும் தனிமையிலே சந்திப்பதோ பேசுவதோ கூடாது [15]. அவர்கள் அஜ்னபிகளாகவே கருதப்படுவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [15]. வல்லாஹுத்தஆலா ஆலம் வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ [15].

← முந்தையஅடுதது →