அஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மாபத ஜனாஸாவை அடக்கம் செய்யும்போது கிப்லாவை முன்னோக்கித்தான் வைக்க வேண்டுமா என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [6]. அன்புள்ள சகோதர சகோதரிகளே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எல்லா விஷயங்களுக்கும் நமக்கு வழிகாட்டி இருக்கிறார்கள் [6]. அந்த அடிப்படையில் ஜனாஸாவை அடக்குவதற்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள் [6]. அந்த வழிகாட்டலை பின்பற்றித்தான் நாம் ஜனாஸாவை அடக்கம் செய்ய வேண்டும் [6]. அந்த அடிப்படையில் கபருக்குள் ஜனாஸாவை வைக்கிற போது கிப்லாவை முன்னோக்கி வைக்க வேண்டுமா? அல்லது விரும்பியவாறு ஜனாஸாவை அடக்கம் செய்யலாமா என்று கேட்டால் சுனன் அபிதாவூத் என்கிற ஹதீஸ் நூலிலே ஒரு ஹதீஸ் பதிவாகி இருக்கிறது கிபலத்துக்கும் அஹயான் ம்வாத்தா உங்களுடைய கிப்லா நீங்கள் உயிரோடு இருக்கும் போதும் மரணித்த பிறகும் காபத்துல்லாதான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸிலே கூறியிருக்கிறார்கள் இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து கிட்டத்தட்ட எல்லா அறிஞர்களுமே ஒரு முஸ்லிமுடைய ஜனாஸாவை அடக்கம் செய்கிற போது லாவை முன்னோக்கி வைப்பதுதான் நபிவழி என்று கூறுகிறார்கள் [6, 7].
இருந்தாலும் கூட இந்த ஹதீஸ் தொடர்பாக இது சஹீஹானதா இல்லையா என்பதிலே ஹதீஸ் கலை அறிஞர்கள் மத்தியிலே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன [7]. ஷேக் நாசருத்தீன் அல்பானி ரஹிமுல்லாஹ் அவர்கள் தன்னுடைய அல் இர்வாஉல் கலீல் என்கிற நூலிலே இது ஹசன் ஆதாரபூர்வமான ஹதீஸ் என்று குறிப்பிடுகிறார்கள் [7]. எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து கபருக்குள் ஒரு மையத்தை வைக்கிற போது அவரை கிப்லாவை முன்னோக்கிய நிலையில் வைப்பதுதான் சுன்னா என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [7]. அதே நேரத்தில் கிப்லாவை முன்னோக்கி வைப்பது சுன்னத்தா வாஜிபா என்கிற ஒரு சட்ட பிரச்சனையும் இமாம்கள் மத்தியிலே காணப்படுகிறது [8]. இதிலே சில அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால் ஒருவர் மையத்தை அடக்குகிற போது கிப்லாவை நோக்கி வைக்காமல் விட்டு அடக்கிவிட்டால் மீண்டும் கபரை தோண்டி கிப்லா திசைக்கு அவரை வைத்து அடக்க வேண்டும் என்கிற கருத்தை சில அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் ஆனால் இதிலே ஜனாஸாவை அடக்குகிற போது கிப்லாவை முன்னோக்குகிற விஷயத்தில் நாம் கவனம் செலுத்திக் கொள்ள வேண்டும் [8]. அறியாமையின் காரணத்தினால் ஒருவர் கபருக்குள் கிப்லாவை முன்னோக்காத நிலையில் வைத்து அடக்கப்பட்டு விட்டால் கபூரை தோண்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம் ஏனென்றால் இதிலே கபூரை கிப்லாவை முன்னோக்கி ஜனாஸாவை வைப்பது உன்னா என்ற கருத்தே வலுவானது வல்லாஹுத்தஆலா ஆலம் [8].