அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லாஹ அம்மாபத இந்த கொரோனா காலத்திலே தந்தை மௌத் ஆகிறார் அல்லது தாய் மௌத் ஆகிறார் அல்லது கணவன் மௌ ஆகிறார் இந்த நேரங்களில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது [2]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த கேள்விகளை கேட்க கூடியவர்கள் வெளிநாடுகளிலே இருக்கிற கணவன்மாரை பற்றி உள்ளூரில் உள்ள மனைவி கேட்கிறார் [2]. அல்லது வெளிநாடுகளில் இருக்கிற பிள்ளைகள் உள்நாடுகளிலே மரணிக்கிற பெற்றோரைப் பற்றி அல்லது இங்குள்ள பிள்ளைகள் வெளிநாடுகளில்ிருந்து மரணிக்கிற பெற்றோர்கள் பற்றி கேட்கிறார்கள் [2]. உண்மையிலே இந்த கொரோனா காலத்திலே வெளிநாடுகளிலே இருக்கக்கூடியவர்கள் சொந்த நாடுகளுக்கு வந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது [2]. சில நேரங்களில் அவர்களுக்கு அங்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது [2]. அங்கே அவர்கள் மரணித்து விடுகிறார்கள் [2]. இந்த நேரத்தில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்கிற ஆவலிலும் நம்முடைய சகோதரர்கள் இந்த கேள்வியை கேட்கிறார்கள் [2]. இதிலே முதலாவதாக ஒரு கணவன் வெளிநாடு ஒன்றிலே இருக்கிறார் [2]. அவர் தற்செயலாகவோ அல்லது கொரோனா காரணமாகவோ அங்கு வபாத் ஆகிவிட்டால் மனைவி இங்கே என்ன செய்ய வேண்டும் என்பதை பொறுத்தவரையில் அவர் மரணித்து அங்கு அடக்கம்பட்ட அடக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து மனைவி இங்கே இத்தா இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [3]. அதேபோல அவருக்காக நிறைய துவா செய்ய வேண்டும் [3]. அவருக்கு சதக்காக்கள் அவருக்காக வேண்டி சதக்காக்கள் செய்ய முடியுமாக இருந்தால் செய்து கொள்ள வேண்டும் [3]. இது தவிர வேறு சடங்குகள் என்று செய்வதற்கு மார்க்கத்தில் எதுவுமே வலியுறுத்தப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [3].
அதே நேரத்தில் வெளிநாட்டிலே ஒரு பிள்ளை இருக்கிறார் [3]. தந்தை ஊரிலே மௌத்தாகிவிட்டார் ஜனாஸாவுக்கு வர முடியவில்லை [3]. அவர் தந்தைக்காக என்ன செய்வது என்று கேட்டால் முதலிலே தந்தைக்காக அவர் துவா செய்ய வேண்டும் [3]. தந்தைக்காக நிறைய பாவ மன்னிப்பு கேட்க வேண்டும் [3]. அதேபோல தந்தையுடைய பெயரில் சதக்கா ஜாரியாக்களை செய்ய முடியுமாக இருந்தால் அவருக்கு அது அனுமதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது [3]. எனவே தந்தையினுடைய பெயரில் அவர் சதக்காவும் செய்யலாம் சதக்கா ஜாரியாவும் செய்யலாம் [3]. சதக்கா என்றால் பொதுவான தர்மங்கள் சதக்கா ஜாரியா என்று சொன்னால் நிலையான தர்மங்கள் இந்த நிலையான தர்மங்களை அவர் தன்னுடைய சொந்த ஊரிலும் செய்யலாம் அல்லது அவர் இருக்கிற இடத்திலும் செய்து கொள்ளலாம் அதேபோலதான் தாய் மௌத்தானாலும் நிலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் [4]. அதேபோல ஒரு பெண் வெளிநாட்டிலே இருக்கிற நேரத்தில் கணவன் ஊரிலே இருந்து மௌத்தாகிவிட்டார் என்று சொன்னாலும் அந்த மனைவிக்கு உடனடியாக நாட்டுக்கு வர முடியாத சூழல் இருக்கும் [4]. இந்தப் பெண்ணும் அங்கு கணவன் மௌத்தான அந்த தினத்திலிருந்து இத்தாவை அனுஷ்டித்தால் சரியானது வேறு அவர்களுக்காக செய்ய வேண்டிய கிரிகைகள் என்று வலியுறுத்தப்பட்ட எதுவுமே கிடையாது மரணித்தவர்களுக்கு ஹஜ் கடமையான நிலையில் இருந்தால் அவர்களுக்காக வேண்டி ஹஜ் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் ஹஜ் செய்து கொள்ளலாம் அல்லது பொதுவாகவே ஹஜ் செய்ய விரும்பினாலும் கடமை இல்லாத நிலையில் ஒருவருக்கு நாம் வலண்டியராக ஹஜ் செய்ய விரும்பினாலும் மௌத்தானவருக்காக ஹஜ் செய்து கொள்ளலாம் இவைகளதான் நாம் செய்வதற்கு என்று இஸ்லாம் காட்டி தந்த செயல்களாகும் வல்லாஹுத்தஆலா ஆலம் [5].