Dr. ஷேக் முபாரக் மதனி

இமாம் ஜமாத் நடக்கும்போது இடைநடுவே சேரும்போது நாம் கையை உயர்த்தி தக்பீர் கட்டித்தான் இமாமோடு சேர வேண்டுமா?

தொழுகை தக்பீர் மஸ்பூக் சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
இமாம் ஜமாத் நடக்கும்போது இடைநடுவே சேரும்போது நாம் கையை உயர்த்தி தக்பீர் கட்டித்தான் இமாமோடு சேர வேண்டுமா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹஸலாரசூலில்லா ஒருவர் பள்ளிவாசலுக்கு தொழ வருகிற போது இமாமை எந்த நிலையில் அடைந்து கொள்கிறாரோ அந்த நிலையில் இவரும் போய் சேர்ந்து கொள்ள வேண்டும் [9]. உதாரணமாக இமாமை ருக்குுடைய நிலையில் இவர் அடைந்து கொண்டால் இவரும் ருக்குவில் சேர்ந்து கொள்ள வேண்டும் [9]. அல்லது இமாம் அத்தஹியாத்தில் இருக்கிற நிலையில் இவர் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் இவரும் அத்தஹியாத்தில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும் [9]. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நீங்கள் அடைந்து கொண்டதை தொழுங்கள் [9]. தவறியதைப் பூரணப்படுத்துங்கள் என்றார்கள் [9]. இந்த ஹதீஸின் அடிப்படையில், இமாமை எந்த நிலையில் அடைகிறோமோ, அந்த நிலையில் நாம், அவரை, துயர வேண்டும் [9].

அதே நேரத்தில், தொழுகைக்குள் நுழைவதற்கு தக்பீரத்துல் இஹராம் என்கிற முதலாவது தக்பீர் அவசியமாகும் [9]. அந்த தக்பீர் சொல்லப்படாமல் அவர் தொழுகையில் நுழைவது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது உதாரணமாக இமாம் அத்தஹியாத்தில் இருக்கிறார் என்றால் இவர் அல்லாஹு அக்பர் என்று தக்பீர் சொல்லி அதற்கு பிறகு அல்லாஹு அக்பர் என்றுதான் அவர் அத்தஹியாத்தை அடைய வேண்டும் [9]. இதிலே கையை கட்ட வேண்டுமா என்பதை பொறுத்தவரையில் அது அவருடைய விருப்பத்தை பொறுத்தது [9]. தக்பீர் சொல்லுவது தொழுகையினுடைய அடிப்படையான அம்சங்களில் ஒன்று தக்பீர் கட்டுவது என்பது தொழுகையில் உள்ள சுன்னாக்களில் ஒன்றாகும் [9]. எனவே அவர் தக்பீரை கட்டிக்கொண்டு சென்றால் சிறந்தது அப்படி தக்பீரை கட்டாமல் அவர் போவதாக இருந்தாலும் அல்லாஹு அக்பர் என்பது கட்டாயமாக சொல்லிக்கொண்டுதான் போக வேண்டும் அல்லாஹு அக்பர் என்று அவர் சொல்ல தவறினால் அவருடைய தொழுகை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது வல்லாஹுத்தஆலா ஆலம் [9].

← முந்தையஅடுதது →