Dr. ஷேக் முபாரக் மதனி

செய்வினை (சூனியம்) செய்யப்பட்டதாக கூறி மாற்றுமத வைத்தியர்களிடம் செல்லும்போது தொப்புளில் இருந்து பல்வேறு பொருட்களை எடுக்க

சூனியம் செய்வினை சிகிச்சை போலி வைத்தியர்

← முந்தையஅடுதது →
கேள்வி
செய்வினை (சூனியம்) செய்யப்பட்டதாக கூறி மாற்றுமத வைத்தியர்களிடம் செல்லும்போது தொப்புளில் இருந்து பல்வேறு பொருட்களை எடுக்கிறார்களே, இது எவ்வாறு சாத்தியம்? இது பற்றிய மார்க்க நிலைப்பாடு என்ன?
பதில்
பதில்:

ஒருவருக்கு சூனியம் செய்யப்பட்டிருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அதை உறுதிப்படுத்துவது என்பது உண்மையிலேயே அஹலு சுன்னாவல் ஜமாத்தை சேர்ந்த இதிலே அனுபவம்ுள்ள உலமாக்கள்தான் அல்லது அனுபவம்ுள்ள சகோதர சகோதரிகள் தான் இதை உறுதிப்படுத்த வேண்டும் [23]. இது அல்லாமல் ஒரு முஸ்லிம் முஸ்லிம் அல்லாதவர்களிடம் இதற்காக வேண்டி செல்வது என்பது உண்மையிலேயே அவர்களுடைய ஈமானை பாதிக்கக்கூடிய விஷயமாகும் [23]. இன்று பெரும்பாலும் குர்ஆன் சுன்னா அடிப்படையில் சிஹ்ருக்கு செய்வினைக்கு சிகிச்சை செய்ய செல்வதை விட ஷிருக்கான வழிகளில் சிகிச்சைகளை தேடி செல்லக்கூடிய மக்களுடைய எண்ணிக்கையே அதிகமாக இருந்து கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம் [24]. இவ்வாறு சூனியத்தை செயலிழக்கச் செய்வதற்காக சூனியக்காரர்களை அல்லது ஷிருக்கான முறையில் வைத்தியம் செய்யக்கூடியவர்களை அல்லது வேறு மதங்களிலே உள்ள மத குருக்களை நாடி செல்பவர்கள் உண்மையிலேயே வழிகேட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் [24].

இந்த சிகிச்சை செய்யக்கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் ஏமாற்று பேர்வழிகளாகும் [24]. அந்த ஏமாற்று வேலைகளில் ஒன்றுதான் அவர்கள் இவ்வாறு தொப்புள் மூலம் தொப்பிலில் இருந்து ஏதாவது பொருட்களை அந்த சூனியம் செய்யப்பட்டவருக்கு எடுக்கிறார்கள் என்கிற ஒரு மாயையாகும் [24]. உண்மையிலேே இவர்கள் தங்களுடைய வாய்களுக்குள் ஏற்கனவே வைத்திருக்க கூடியவற்றை தந்திரமான முறையில் மிக நுணுக்கமாக அல்லது கைகளுக்குள் மறைத்து வைத்திருக்க கூடியவைகளை மிக நுணுக்கமான முறையிலே வெளியே எடுத்து காண்பித்து அந்த வந்தவரை நம்ப வைக்கிறார்கள் இதுதான் நீங்கள் கேட்ட அந்த விஷயமாகும் [24, 25]. எனவே உண்மையிலேயே சூனியம் செய்யப்பட்டிருக்கிறது என்பதை அனுபவம்ுள்ள அஹலு சுன்னாவல் ஜமாஅத்தை சேர்ந்த உலமாக்கள் அல்லது தாயிகள் அல்லது அனுபவம்ுள்ள சகோதர சகோதரிகள் அடையாளம் கண்டால் அதை போக்குவது என்பது மிக சிம்பிளானதாகும் [25]. அதற்குரிய சிறந்த வழிதான் குல்லாஹு அஹது குரில்லஸ் போன்ற சூராக்களை ஓதி ஊதுவது அதுபோல அவர்களுக்கு சூரத்துல் பாத்திஹாவை ஓதி ருக்கியா செய்வது அதேபோல ஏனைய துஆக்கள் அவ்ராதுகளை ஓதி ருக்கியா மூலம் அவர்களை குணப்படுத்துவது என்பதுதான் இஸ்லாமிய முறையிலான சிகிச்சை முறையாகும் [25].

← முந்தையஅடுதது →