நாம் ஈமான் கொள்ள வேண்டிய ஆறு அடிப்படை அம்சங்கள் இருக்கின்றன [20]. அந்த மறைவான ஆறு அம்சங்களுல் மறுமை பற்றிய நம்பிக்கை மிக பிரதானமான ஒன்றாகும் [20]. அந்த அடிப்படையிலே புகாரியிலே பதிவு செய்யப்பட்ட ஒரு ஹதீஸிலே நபி (ஸல்) அவர்கள் சொல்லுகிறார்கள் நரகத்திற்கு மேலே ஒரு பாலம் போடப்படும் [20]. அந்த பாலத்தை கடக்க முடியாதவர்கள் விழுகிற போது நரகத்தில் விழுந்து விடுவார்கள் பாலத்தை கடக்கிறவர்கள் சுவர்க்கத்திற்கு செல்வதற்கு முன்னால் சுவர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையில் கன்ழரா என்ற ஒரு இடத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் [20, 21]. அவர்கள் மத்தியில் அப்படி தடுத்து நிறுத்தப்படுகிறவர்கள் உலகத்தில் அவர்கள் செய்த அநீதிகளுக்காக அந்த இடத்தில் வைத்து பழிக்கு பழி தீர்க்கப்பட்ட பிறகு அவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட பிறகு அவர்கள் சுவர்க்கம் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் [21]. இந்த ஹதீஸ் புகாரியிலே 2440வது இலக்கத்திலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது [21].
இந்த ஹதீஸிலே சிராத் என்ற பாலத்தை கடந்த பிறகு அநீதிகள் உள்ளவர்கள் கன்தரா என்கிற ஒரு இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு அந்த இடத்தில் வைத்து பழிக்கு பழி அவர்கள் அதாவது யாருக்காவது அநீதி இழைத்திருந்தால் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்குரிய நீதி பெற்றுக் கொடுக்கப்பட்டு எல்லோரும் பரிசுத்தப்படுத்தப்பட்ட பிறகு சுவர்க்கத்திற்குள் நுழைவிக்கப்படுவார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் [21]. இது சஹீஹான ஒரு ஹதீஸ் என்பதனால் இதிலே சொல்லப்படக்கூடிய அந்த கந்தரா என்கிற அந்த இடத்தை அல்லது அந்த பாலத்தை நாம் நம்புவது நம்முடைய ஈமானோடு சம்பந்தப்பட்ட ஒரு அம்சமாக இருக்கிறது [21]. எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் சிராத்துக்கு பிறகு கந்தரா என்கிற ஒரு இடம் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது [22].