Dr. ஷேக் முபாரக் மதனி

சுய இன்பம் காண்பது பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன?

சுய இன்பம் பாலியல் உணர்வு உணவு திருமணம்

← முந்தையஅடுதது →
கேள்வி
சுய இன்பம் காண்பது பற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்
பதில்:

அல்லாஹ் ஜல்லஷானஹுத்தஆலா மனிதனிலே இயல்பாக ஏற்படுத்தி இருக்கிற ஒரு விஷயம்தான் பாலியல் உணர்வாகும் [15]. இந்த பாலியல் உணர்வை ஒரு மனிதன் ஹலாலான முறையில் நெறைப்படித்துக் கொள்வதற்கான வழியாக இஸ்லாம் திருமணத்தை அறிமுகப்படுத்துகிறது [15]. இந்த பாலியல் உணர்வை தீர்த்துக் கொள்வதற்காக வேண்டி சுய இன்பம் காண்பது மாஸ்டர்பேஷன் என்று சொல்வார்கள் இது அனுமதிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் இதிலே பெரும்பாலான உலமாக்கள் இது ஹராம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு விஷயம் என்று கூறுகிறார்கள் [16]. இதற்கு ஆதாரமாக அவர்கள் குர்ஆனையும், ஹதீஸையும் முன் வைக்கிறார்கள் [16]. சுய இன்பம் காண்பது ஹராம் என்று சொல்லக்கூடிய பெரும்பாலான உலமாக்கள் முன்வைக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு ஆதாரம்தான் சூரத்துல் முமினூனில் அல்லாஹுத்தஆலா சொல்கிற அவர்கள் தங்களுடைய கற்புகளை காத்துக் கொள்வார்கள்... தங்களுடைய மனைவியர் அல்லது வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட அடிமைகள் இவர்களைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் இவர்கள் கற்பை காப்பாற்றிக் கொள்வார்கள் என்று அல்லாஹுத்தஆலா சொல்கிற இந்த வசனங்களை ஆதாரமாக வைத்து ஒரு மனிதன் சுய இன்பம் காண்பது அனுமதிக்கப்பட்டிருக்குமாக இருந்தால் அல்லாஹ் இந்த இடத்தில் மனைவியையும் வலக்கரம் சொந்தமாக்கி கொண்ட அடிமை பெண்ணையும் விதிவிளக்காக ஆக்கியதோடு இதையும் சொல்லி இருப்பான் என்று சொல்கிறார்கள் [16, 17].

அதேபோல ஹதீஸிலே வாலிபர்களே உங்களுக்கு திருமணம் முடிப்பதற்குரிய உடல் வலிமையும் பொருளாதார வசதியும் இருந்தால் திருமணம் முடித்து கொள்ளட்டும்... யார் திருமணம் முடிக்க வசதி இல்லாமல் இருக்கிறாரோ அவர் நோன்பு இருக்கட்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் [17]. திருமணம் முடிக்க முடியாத போது அவர் தன்னுடைய இச்சையை அல்லது பாலியல் உணர்வை சுய இன்பத்தின் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று இருந்திருந்தால் அல்லாஹ்வுடைய தூதர் அதை இங்கே மென்ஷன் பண்ணி இருப்பார்கள் [17]. ஆனால் அவர்கள் ஒன்று நீ திருமணம் முடி அல்லது நோன்பிரு, நோன்பிருப்பது உன்னுடைய கற்பை காக்க உனக்கு உதவும் என்பதை அல்லாஹ்வுடைய தூதர் சொல்வதிலிருந்து சுய இன்பம் காண்பது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் என்று உலமாக்கள் குறிப்பிடுகிறார்கள் [17, 18]. ஒரு சில உலமாக்கள் நிர்பந்தமான நிலைகளில் ஒருவர் விபசாரத்தில் விழுந்து விடுவார் என்கிற கட்டத்தில் இது அனுமதிக்கப்படும் என்கிற கருத்தை முன்வைத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் இங்கே கவனத்திலே கொள்ள வேண்டும் [18].

பொதுவாக மருத்துவ ரீதியாகவும் சுய இன்பம் காண்பது என்பது ஒரு ஆரோக்கியமான விஷயம் கிடையாது என்பதை வலியுறுத்துகிறார்கள் [18]. சுயின்பம் காணக்கூடியவர்கள் நரம்பு தளர்ச்சிகளுக்கு உள்ளாகிறார்கள் குறிப்பாக பாலியல் ரீதியாக அவர்கள் பலவீனம் அடைகிறார்கள் [18]. திருமணம் முடித்த பிறகு தாம்பத்திய வாழ்க்கையில் பூரண சுகத்தை அடைய முடியாத ஒரு பலவீனம் இதனால் அவர்களுக்கு ஏற்படுகிறது [18]. எனவே மார்க்கத்தின் அடிப்படையிலும் மருத்துவத்தின் அடிப்படையிலும் சுய இன்ப காண்பது என்பது அனுமதிக்க முடியாத ஒரு செயல் என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [18, 19]. இவ்வாறான கெட்ட பழக்கங்களுக்கு உள்ளாக இருக்கக்கூடிய அல்லது சிலர் இதற்கு அடிக்ட் ஆகி இருப்பார்கள், இவ்வாறானவர்கள் நல்ல மருத்துவ ஆலோசனைகளை பெற்று உளவியல் ஆலோசனைகளை பெற்று இதிலிருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும் [19].

← முந்தையஅடுதது →