Dr. ஷேக் முபாரக் மதனி

சுபஹு தொழுகைக்குப் பிறகு சுன்னத் தொழுவது பாவமாகுமா?

சுபஹ் சுன்னத் தொழுகை தடை செய்யப்பட்ட நேரம்

← முந்தையஅடுதது →
கேள்வி
சுபஹு தொழுகைக்குப் பிறகு சுன்னத் தொழுவது பாவமாகுமா?
பதில்
பதில்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சில நேரங்களைக் குறிப்பிட்டு, அந்த நேரங்களில் தொழுவதை நமக்கு தடை செய்துள்ளார்கள் [11]. அவ்வாறு தடை செய்யப்பட்ட நேரங்களில் ஒன்றுதான், சுபஹு தொழுததிலிருந்து, சூரியன் உதிக்கும் வரை உள்ள நேரமாகும் [11]. புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களிலே, இந்த தடை வந்திருப்பதை நாம் பார்க்கலாம் [11]. எனவே சுபஹு தொழுகைக்கு பிறகு, சூரியன் உதிக்கும் வரைக்கும் எந்த ஒரு சுன்னத்தான நபிலான தொழுகையும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [11]. அதே நேரத்தில் சுபஹுக்கு முன்னால் தொழ வேண்டிய இரண்டு ரக்அத் சுன்னத் என்பது இஸ்லாத்தில் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒன்றாகும் [11]. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இரண்டு ரக்காத்தும் உலகத்தில் உள்ள அனைத்தையும் விட சிறந்தது என்று சொன்னார்கள் [11]. அதை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் விடாமல் செய்து வந்திருக்கிறார்கள் [12].

ஊரில் இருக்கும் போதும் அந்த இரண்டு ரக்காத்துக்களை தொழுதி இருக்கிறார்கள் பிரயாணத்தில் இருக்கும் போதும் அந்த இரண்டு ரக்காத்துக்களையும் தொழுதிருக்கிறார்கள் [12]. ஐங்கால தொழுகைகளுக்கு முன்னாலும் பின்னாலும் உள்ள சுன்னத்துகளை பொறுத்தவரையில் பிரயாணங்களில் நபி (ஸல்) அவர்கள் அவற்றை பேணக்கூடியவர்களாக இருக்கவில்லை, ஆனால் சுபஹுடைய முந்திய இரண்டு ரக்காத்துக்களையும் அவர்கள் பிரயாணத்திலும் தொழுதி இருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம் [12]. இந்த இரண்டு ரக்அத்துக்களையும் ஒருவர் சுபஹு தொழுவதற்கு முதல் தொழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால், சுபஹு தொழுகைக்கு பிறகு, அந்த இரண்டையும் தொழலாமா இல்லையா? என்பதிலே, அறிஞர்கள் மத்தியிலே கருத்து வேறுபாடு காணப்படுகிறது [12]. இதிலே, மிக சரியான கருத்து, ஹதீஸோடு ஒத்துச் செல்லக்கூடிய கருத்து, ஒருவர் வளமையாக சுபஹுடைய முந்திய சுன்னத்தை தொழுது வரக்கூடியவர், தவிர்க்க முடியாத காரணங்களால், சுபஹுக்கு முன்னால், அந்த இரண்டையும் தொழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டால் சுபஹு தொழுகைக்கு பிறகு அந்த இரண்டையும் தொழுது கொள்ளலாம் என்பதுதான் [12, 13].

ஒரு தடவை ஒரு நபித்தோழர் சுபஹவுக்கு பிறகு இரண்டு ரக்காத் தொழுகிறார் நபி (ஸல்) அவர்கள் அவரை கண்டிக்கிறார்கள் அவர் சொல்லுகிறார் சுபஹவுடைய முந்திய இரண்டு ரக்காத் தான் அவை என்று சொன்னபோது அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் மௌனமாகி விட்டார்கள் என்பதை ஹதீஸ்களிலே நாம் பார்க்கிறோம் [13]. எனவே சுபஹுக்கு பிறகு பொதுவாக எந்த தொழுகை சுன்னத்தான எந்த தொழுகையும் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [13]. சுபஹுக்கு முன்னால் உள்ள இரண்டு ரக்காத் சுன்னத் வலியுறுத்தப்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் [13]. வளமையாக சுபஹுக்கு முன்னால் இரண்டு ரக்காத் தொழுது வரக்கூடிய ஒருவருக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த இரண்டு ரக்காத் மிஸ் ஆகிவிட்டால் அதை சுபஹுக்கு பிறகு தொழுது கொள்ளலாம் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும் [14].

← முந்தையஅடுதது →