Dr. ஷேக் முபாரக் மதனி

சுன்னத்தான தொழுகைகளை உட்கார்ந்த நிலையில் தொழலாமா?

சுன்னத் தொழுகை உட்கார்ந்து தொழுதல் சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
சுன்னத்தான தொழுகைகளை உட்கார்ந்த நிலையில் தொழலாமா?
பதில்
பதில்:

ஃபர்தான தொழுகைகளை பொறுத்தவரையில், நின்று கொண்டு தொழுவது என்பது, ஃபர்த் தொழுகையினுடைய அடிப்படையான அம்சங்களுள் ஒன்றாகும் [9]. இதை, ஃபிக்ஹு மொழியிலே, ருகூன் என்று சொல்வார்கள் [9]. நின்ற நிலையில் தொழ முடியுமான ஒருவர் ஃபர்லான தொழுகைகளை நின்ற நிலையில் தான் தொழ வேண்டும் அவர் உட்கார்ந்து தொழுதால் அந்த தொழுகை பாத்திலாகிவிடும் [9]. ஹதீஸ்களில் இது தெளிவாக வலியுறுத்தப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நீ நின்ற நிலையில் தொழுவீராக நின்ற நிலையில் தொழ முடியாத போதுதான் உட்கார்ந்து கொண்டு தொழுவீராக என்று சொன்னார்கள் [9]. எனவே நின்ற நிலையில் தொழ முடியுமான ஒருவர் ஃபர்லான தொழுகைகளை நின்ற நிலையில் தான் தொழ வேண்டும் அவர் உட்கார்ந்து தொழுதால் அந்த தொழுகை பாத்திலாகிவிடும் [9].

அதே நேரம் சுன்னத்தான தொழுகைகளை பொறுத்தவரையில் இருந்த நிலையில் உட்கார்ந்த நிலையில் அதை நிறைவேற்றலாமா என்று கேட்டால் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல், ஒருவர் உட்கார்ந்து சுன்னத்தான தொழுகையை தொழ விரும்பினால் அவருக்கு அதற்கு அனுமதி இருக்கிறது [10]. அப்துல்லாஹ் இப்னு அம்ருலாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அதாவது ஒருவர் உட்கார்ந்து தொழுதால் அவருக்கு அந்த தொழுகையினுடைய அறைவாசி நன்மை கிடைக்கும் என்று சொன்னார்கள் என்கிற இந்த ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிமிலே பதிவு செய்யப்பட்டிருக்கிறது [10]. இந்த ஹதீஸ்க்கு விளக்கம் தரக்கூடிய உலமாக்கள், ஒருவர் சுன்னத்தான தொழுகையை உட்கார்ந்து தொழ விரும்பினால் நியாயமான காரணங்கள் எதுவும் இல்லாமல், உட்கார்ந்து தொழ விரும்பினால், அவர் தாராளமாக உட்கார்ந்து தொழலாம், ஆனால், நன்மையில் பாதிதான் அவருக்கு கிடைக்கும் என்ற அந்த விளக்கத்தை சொல்கிறார்கள் [10]. அந்த அடிப்படையில், நாம் ஒருவர் உட்கார்ந்து சுன்னத்தான தொழுகையை தொழ விரும்பினால் அவரை தடுக்க முடியாது அவருக்கு மார்க்கத்திலே அதற்கு அனுமதி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் [10].

← முந்தையஅடுதது →