பொதுவாக ஃபர்ளான தொழுகைகள் போக உபரியான தொழுகைகள் நிறைய நமக்கு இஸ்லாத்திலே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது [5]. அதிலே குறிப்பாக அசுனன் அராத்திபா என்று சொல்லக்கூடிய ஃபர்தான தொழுகைகளுக்கு முன்னால் பின்னால் தொழக்கூடிய 12 ரக்காத் தொழுகைகள் நபி (ஸல்) அவர்கள் அறிமுக படுத்தி இருக்கிறார்கள் [5]. அதிலே லுஹருக்கு முன்னால் நான்கு ரக்காத்துக்கள் இருக்கின்றன, ஏனைய தொழுகைகள் இரண்டு இரண்டு ரக்காத்தாக அமையும் [5]. லுஹருக்கு பின்னால் இரண்டு மகரிபுக்கு பின்னால் இரண்டு இஷாவுக்கு பின்னால் இரண்டு பஜ்ருக்கு முன்னால் இரண்டு என்று 12 ரக்காத்துக்கள் இதிலே லுஹருக்கு முன்னால் நான்கு ரக்காத்துக்கள் வருகின்றன [5]. அதேபோல ரசூல்லாஹம் அவர்கள் சொன்னார்கள் யார் அசருக்கு முதல் நான்கு ரக்அத் தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக என்று துவா செய்திருக்கிறார்கள் [6]. அதேபோல இரவு தொழுகை 11 ரக்காத்துக்கள் இருக்கின்றன [6]. இப்ப இந்த தொழுகைகளில் நான்கு ரக்காத்தை உடைய தொழுகைகளை ஒரே ஸலாமில் தொழலாமா என்று கேட்கிறார்கள் [6]. பொதுவாக சுன்னத்தான தொழுகையை பொறுத்தவரையில் இரண்டு இரண்டாக தொழுவதைதான் நபி (ஸல்) அவர்கள் ஆர்வப்படுத்தி இருக்கிறார்கள் [6].
துஹருக்கு முன்னால் நான்கு என்று சொன்னால் அதை இரண்டு இரண்டாக நான்கை தொழுவது இரண்டு ஸலாம்களில் தொழ வேண்டும் [6]. அதேபோல இரவு தொழுகையை பொறுத்தவரையில் ரசூல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் இரவு தொழுகை இரண்டு இரண்டாக தொழப்பட வேண்டும் என்று சொன்னார்கள் [6]. இன்னும் ஒரு ரிவாயத்தில் இரவு தொழுகையாக இருந்தாலும் சரி பகலிலே தொழப்படக்கூடிய சுன்னத்தாக இருந்தாலும் இரண்டு இரண்டாக தொழ வேண்டும் என்று சொன்னார்கள் [6]. எனவே இரண்டிரண்டாக தொழுவதுதான் சரியான வழிமுறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [6]. உதுஹருக்கு முன்னால் உள்ள நான்கையும் முதலில் இரண்டு ரக்காத்துக்கள் தொழுது ஸலாம் கொடுப்பது பிறகு இரண்டு ரக்காத்துக்கள் கொடுத்து ஸலாம் கொடுத்து கொள்வது [7]. அதேபோல அசருக்கு முன்னால் நான்கு தொழ ஒருவர் விரும்பினால் இரண்டு இரண்டாக அவர் தொழுது கொள்ள வேண்டும் [7]. ஆனால் சில உலமாக்கள் சொல்லுகிறார்கள் நான்கு ரக்காத்துக்கள் ஒரே சலாமில் ஒருவர் கொடுக்க விரும்பினால் அது அதில் தடை இல்லை அதில குற்றமில்லை என்று சொல்கிறார்கள் [7].
அப்படி தொழும்போது அவர்கள் நான்கு ரக்காத்துக்களிலும் முதலாவது ரக்காத்தில் சூரத்துல் பாத்திஹாவும் இன்னும் ஒரு சூராவும் இரண்டாவது ரக்காத்தில் சூரத்துல் பாத்திஹாவும் இன்னும் ஒரு சூராவும் மூன்றாவது ரக்காத்தில் சூரத்துல் பாத்திஹாவும் இன்னும் ஒரு சூராவும் நான்காவது ரக்காத்திலும் சூரத்துல் பாத்திஹாவும் இன்னும் ஒரு சூராவும் ஓத வேண்டும் [7]. இரண்டாவது ரக்காத்தில் அத்தஹியாத்து இருக்க வேண்டிய அவசியமில்லை, நான்கையும் ஒரே அத்தஹியாத்தில் ஒரே ஸலாமில் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள் [7]. இது பொதுவான ஆதாரங்களின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டது என்று ஷேக் இப்னு பாஸ் (ரஹ்) அவர்களும் குறிப்பிடுகிறார்கள் [7]. இருந்தாலும் கூட இரண்டு இரண்டாக தொழுவதுதான் தெளிவான சுன்னாவில் வந்திருக்கக்கூடிய விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [8].