இந்த உலகத்தை பொறுத்தவரையில், இது, நிரந்தரமான ஒன்று கிடையாது [12]. இந்த உலகத்திற்கு என்று, ஒரு ஆயுளை அல்லாஹுத்தஆலா வைத்திருக்கிறான் [12]. அந்த தவணை வரும்போது, அல்லாஹுத்தஆலா, இந்த உலகத்தை அழித்து விடுவான் [12]. அதேபோல இந்த உலகத்தில் பிறக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹுத்தஆலா ஒரு குறிப்பிட்ட ஆயுளை வைத்திருக்கிறான் [12]. அல்லாஹ் நிர்ணயித்திருக்கிற, ஆயுள் முடிகிற போது, அவனை அல்லாஹுத்தஆலா எடுத்துக்கொள்வான்; அல்லது அவனை மரணிக்கச் செய்வான் [12]. அந்த அடிப்படையில், இந்த உலகத்தில் வாழக்கூடிய எல்லா உயிரினங்களும் மரணத்தை சந்தித்தே தீர வேண்டும்; "குள்ளு நப்ஸின் தாயிகத்துல் மவ்த்" எல்லா உயிர்களும் மரணத்தை அனுபவிக்க வேண்டும் என்று அல்லாஹுத்தஆலா சொல்கிறான் [12]. நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் நாம் எங்கிருந்தாலும் அந்த மௌத் நம்மை வந்தே தீரும் [12]. அதிலிருந்து யாரும் தப்பவே முடியாது என்பதையும் அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே சொல்கிறான் [13]. அந்த அடிப்படையில் ஒவ்வொருவரும் தன்னுடைய தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவருடைய ஆயுள் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை ஹதீஸ்கள் நமக்கு சொல்கின்றன [13].
அந்த வகையிலே நம்முடைய பிள்ளைகள் நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு பிரிவது என்பது அல்லாஹ்வுடைய ஒரு ஏற்பாடாகும் [13]. இருந்தாலும் கூட அவ்வாறு நம்முடைய குழந்தைகள், நம்முடைய நெருக்கமானவர்கள், நமக்கு விருப்பத்திற்குரியவர்கள் இந்த உலகத்தை விட்டு பிரிகிற போது நமக்கு அதனால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என்பதை யாராலும் மறக்க முடியாது [13]. அவ்வாறான நிலைகளிலே நாம் பொறுமையை கடைபிடிப்பது என்பது மிக முக்கியமான ஒரு கடமையாக இருந்து கொண்டிருக்கிறது [13]. சூரத்துல் பகரா 155வது வசனத்தில் அல்லாஹுத்தஆலா சொல்லும்போது, நிச்சயமாக நாம் உங்களை பயத்தை கொண்டு சோதிப்போம்; பசியை கொண்டு சோதிப்போம்; பொருளாதாரத்தில் குறைவுகளை ஏற்படுத்துவது கொண்டு சோதிப்போம்; உயிர்களை குறைப்பது கொண்டும் உங்களை நாம் சோதிப்போம் என்று அல்லாஹ் சொல்லிவிட்டு, "வபஷ்ஷிரிஸ் ஸாபிரீன்" பொறுமையாளர்களுக்கு நபியே நீங்கள் நன்மாராயம் சொல்லுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் [13, 14]. இவ்வாறான இழப்புகள் ஏற்படும்போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும் [14]. பொறுமையை பிடிப்பது என்றால் என்ன? இவ்வாறான சோதனைகள் வருகிறபோது "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" என்று சொல்லி நிலைகுலையாமல், அல்லாஹ்வுக்கு பொருத்தமற்ற வார்த்தைகளை பேசாமல், விரக்திக்கு செல்லாமல் ஒருவர் இருப்பதுதான் பொறுமை என்பதன் அர்த்தமாகும் [14]. அவ்வாறு பொறுமையாக இருக்கிற போது நிச்சயமாக அல்லாஹுத்தஆலா அவருக்கு மன ஆறுதலை வழங்குவான் என்பதையும் அந்த வசனத்தின் இறுதியிலே அல்லாஹுத்தஆலா சொல்லிக் காட்டுகிறான் [14].
உம்முஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவருக்கு ஒரு சோதனை வருகிறபோது அவர் "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன், அல்லாஹும்மஃஜுர்னி ஃபீ முஸீபத்தி வஅக்லிஃப் லீ கய்ரன் மின்ஹா" என்கிற துஆவை ஓதினால் அவருக்கு ஏற்பட்ட இழப்பை விட சிறந்த ஒன்றை அல்லாஹ் அவருக்கு தருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் [14, 15]. என்னுடைய கணவர் மரணித்த போது நான் இதை ஓதினேன், இருந்தாலும் என்னுடைய மனம் சொன்னது உன்னுடைய கணவனை விட சிறந்த ஒருவர் இந்த உலகத்தில் யார்தான் இருப்பார், அப்படி ஒருவர் உனக்கு எப்படித்தான் கிடைப்பார் என்கிற ஒரு எண்ணம் என்னுடைய உள்ளத்தில் தோன்றியது; இருந்தாலும் கூட நபி (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தையில் நம்பிக்கை வைத்து நான் ஓதினேன், அல்ஹம்துலில்லாஹ் எனக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கணவனாக கிடைத்தார்கள் என்று உம்முஸலமா (ரலி) அவர்கள் சொல்லி காட்டுகிறார்கள் [15]. எனவே நமக்கு இழப்புகள் சோதனைகள் ஏற்படுகிற போது இந்த வார்த்தையை நாம் மனப்பூர்வமாக சொல்லுகிற போது அல்லாஹ் அதை வைத்து நமக்கு ஆறுதலை தருவான் [15].
அதே நேரத்திலே ரசூல் (ஸல்) அவர்களுடைய மகன் இப்ராஹீம் சுமார் 18 மாதங்களை உடைய குழந்தையாக இருக்கும்போது வஃபாத் ஆனார்கள் [16]. ரசூல் (ஸல்) அவர்கள் குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு கண் கலங்குகிறார்கள்; கண்ணால் கண்ணீர் வடிகிறது [16]. இதை பார்த்த சஹாபாக்கள் ஆச்சரியமாக "அல்லாஹ்வுடைய தூதரே நீங்களும் அழுகிறீர்களா" என்று கேட்டபோது அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்: "உள்ளம் கவலைப்படுகிறது, கண்கள் கண்ணீர் சிந்துகின்றன, எங்களுடைய ரப்புக்கு பொருத்தமில்லாத எதையும் நாம் சொல்ல மாட்டோம் பேச மாட்டோம்" என்று சொன்னார்கள் [16]. அல்லாஹ்வுடைய தூதருக்கும் கவலை வந்திருக்கிறது, ஆனால் அவர்கள் பொறுமையை கடைபிடித்தார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [16]. இந்த குழந்தைகளை இழக்கிற போது ஏற்படக்கூடிய இந்த சோதனையில் ஒருவர் பொறுமையாக இருந்தால் அவருக்கு சுவர்க்கத்திலே ஒரு வீடு கட்டப்படுகிறது [16]. அந்த வீட்டுக்கு "பைத்துல் ஹம்து" (புகழுக்குரிய வீடு) என்று பெயர் சூட்டப்படுகிறது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள் [17].
அதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வீட்டுக்கு ஒரு மனிதர் வருவார், அவரோடு மகனையும் அழைத்துக் கொண்டு வருவார் [17]. ஒரு நாள் மகனை காணவில்லை [17]. அல்லாஹ்வுடைய தூதர் கேட்டார்கள் எங்கே உங்களுடைய மகன் என்று; அவர் மரணித்து விட்டார் என்று சொன்னபோது அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் அவரை நீங்கள் அதிகமாக நேசிக்கிறீர்களா என்று [17]. அவர் ஆம் என்று சொன்னார் [17]. அல்லாஹ்வுடைய தூதர் அவருக்கு சொன்ன ஆறுதல் என்ன தெரியுமா? "உன்னுடைய இந்த குழந்தை நீ சொர்க்கத்திற்குள் நுழையும் போது, எந்த வாசலால் நீ நுழைந்தாலும், அந்த வாசலில் உனக்காக அவர் காத்துக் கொண்டிருப்பார்" என்று சொன்னார்கள்; இதை நீ விரும்பவில்லையா என்று கேட்டார்கள் [17]. எனவே நெருக்கமானவர்களையும் குறிப்பாக குழந்தைகளையும் இழந்து நிற்கிற சகோதர சகோதரிகளே இவைகள் எல்லாம் நமக்காக சொல்லப்பட்ட நன்மாராயங்களாகும் [17]. இந்த உலகத்தில் யாரும் நிரந்தரமாக இருக்க போவதில்லை என்ற அடிப்படையில் நம்முடைய குழந்தைகள் வபாத்தாகி இருக்கிறார்கள் [18]. அதிலும் அவர்கள் சிறுவயதில் வபாத் ஆகுவது அவர்களுக்கு மிகப்பெரிய நலவுதான் [18]. அதை நேரத்தில் நமக்கும் அதிலே நிறைய நன்மைகள் இருக்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்கிற போது நிச்சயமாக நம்மால் ஆறுதல் அடைய முடியும் [18].