Dr. ஷேக் முபாரக் மதனி

சிறு பிள்ளைகளுக்கு எவ்வாறு ஈமானை சொல்லிக் கொடுப்பது?

குழந்தை வளர்ப்பு அல்லாஹ் பெற்றோர்

← முந்தையஅடுதது →
கேள்வி
சிறு பிள்ளைகளுக்கு எவ்வாறு ஈமானை சொல்லிக் கொடுப்பது?
பதில்
பதில்:

சிறுவர்களை பொறுத்தவரையில் அவர்கள் அல்ஃபித்ரா அஸ்ஸலீமா என்று சொல்லக்கூடிய ஒரு தூய்மையான இயல்போடு கூடியவர்கள் [8]. ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "குல்லு மவ்லூதின் யூலது அலல் ஃபித்ரா" ஒவ்வொரு குழந்தையும் நல்ல இயல்போடு தான் பிறக்கிறது என்று சொன்னார்கள் [8]. அப்ப அந்த நல்ல இயல்பை பெற்றோர் பயன்படுத்திக்கொண்டு நல்ல விஷயங்களை அந்த பிள்ளைகளின் மனங்களில் பதிக்க வேண்டும் [8]. குறிப்பாக இஸ்லாமிய அகீதாவை அந்த குழந்தைகளின் உள்ளங்களில் ஊட்ட வேண்டும் [8]. இதற்கு ரசூல் (ஸல்) அவர்கள் காட்டி தந்த சில வழிமுறைகள் இருக்கின்றன [8]. அதிலே ஒன்றுதான் அவர்களிடம் கேள்வி கேட்பது [8]. குழந்தைகளிடம் கேள்வி கேட்டு, அவர்களுக்கு அகீதாவை சொல்லிக் கொடுப்பது [8]. உதாரணமாக, ஒரு நாள் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சொல்லுகிறார்: "யா ரசூலல்லாஹ் என்னிடம் ஒரு சிறிய அடிமை பெண் இருக்கிறாள். ஒரு நாள் நான் அவளுக்கு அடித்து விட்டேன். கவலையாக இருக்கிறது. அந்த பிள்ளையை நான் விடுதலை செய்ய விரும்புகிறேன்" என்று சொன்னபோது, அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள், அவரை அழைத்து வாருங்கள் என்று [8].

அந்த சிறுமி அழைத்து வரப்பட்டால், அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் கேட்கிறார்கள், "அய்னல்லாஹ்" (அல்லாஹ் எங்கே இருக்கிறான்?) [9]. உடனே அந்த சிறுமி சொன்னாள் "அல்லாஹ் பிஸ்ஸமா" (அல்லாஹ் வானத்தில் இருக்கிறான்) என்று [9]. பிறகு கேட்டார்கள் "மன் அன" (நான் யார்) என்று கேட்டார்கள் [9]. அதற்கு அந்த பிள்ளை சொன்னது "அன்த ரசூலுல்லாஹ்" (நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர்) என்று [9]. உடனே அல்லாஹ்வுடைய தூதர் அந்த நபித்தோழரிடம் சொன்னார்கள், அந்த சிறுமியை நீ விடுதலை செய், என்றால் அவள் முஃமினானவள் என்று சொன்னார்கள் [9]. இங்கே ரசூல் (ஸல்) அவர்கள் அகீதாவை கேள்வியின் மூலம் கற்றுக் கொடுக்கிற ஒரு நிலையை பார்க்கிறோம் [9]. அதேபோன்று பல நபித்தோழர்களிடம் ரசூல் (ஸல்) அவர்கள் அவ்வாறு நடந்திருப்பதையும் ஹதீஸ்களிலே நாம் பார்க்க கூடியதாக இருக்கிறது [9]. அதேபோல அழகான சந்தர்ப்பங்களை பயன்படுத்துவது [9].

பிள்ளைகளை நாம் வாகனத்தில் ஏற்றுச் செல்லும் போது, பைக்கில் ஏற்று செல்லும்போது அவர்களோடு பேசுவது, அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது [10]. உதாரணமாக ரசூலல்லாஹு (ஸல்) அவர்கள் ஒரு நாள் சிறிய நபித்தோழரை தன்னுடைய வாகனத்திலே ஏற்றிக்கொண்டு அவருக்கு சொல்லுகிறார்கள் அதாவது அகீதா உடைய விஷயங்கள், "யா குலாம் இன்னி உஅல்லிமுக்க கலிமாத்" சிறுவனே உனக்கு நான் சில வார்த்தைகளை கற்றுத் தருகிறேன், அல்லாஹ்வுடைய சட்டங்களை நீ பேணி நடந்தால் அல்லாஹ் உன்னை பாதுகாப்பான் என்று சொல்லி அகீதாவுடைய விஷயங்களை அவருக்கு கற்றுக் கொடுக்கிறார்கள் [10]. எனவே பயணங்களை, அதேபோல நாம் பிள்ளைகளோடு நெருக்கமாக இருக்கிற சந்தர்ப்பங்களில் அவர்களிடத்தில் இவ்வாறு அகீதாவை கற்றுக் கொடுக்கலாம் [10]. அதேபோன்று சில காட்சிகளை காட்டி, உதாரணமாக கடல், கடலை காட்டி, மலையை காட்டி, இவ்வாறான அல்லாஹ்வுடைய படைப்புகளை காட்டி அதன் மூலம் அவர்களுக்கு அகீதாவை கற்றுக் கொடுக்கலாம் [10].

இவ்வாறு நம்மால் முடியுமானவரை நம்முடைய குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்து இந்த ஈமானுடைய அகீதாவுடைய விஷயங்களை நாம் கற்று கொடுக்க முயற்சிய வேண்டும் [10]. அவ்வாறு செய்தால் அந்த அல்ஃபித்ரா என்கிற அந்த இயல்பு நிலையோடு இந்த விஷயங்கள் வேகமாக ஒத்திச் சென்று நல்ல முஃமினான குழந்தைகளாக அந்த குழந்தைகள் வளர்ந்து வரும் [11]. அல்லாஹுத்தஆலா அப்படியான குழந்தைகளாக நம்முடைய குழந்தைகளை ஆக்கி வைப்பானாக [11].

← முந்தையஅடுதது →