நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் என்கிற பட்டியலில் அல்லாஹுத்தஆலா நோயாளிகளை அடையாளப்படுத்துகிறான் [6]. இப்ப நோயாளிகள் நோன்பை விடுவதற்கும், விட்ட நோன்பை பிறகு கழா செய்வதற்கும் மார்க்கத்திலே அனுமதி இருக்கிறது [6]. இந்த நோயாளிகளில் இலேசான நோய் உள்ளவர்கள் இருப்பார்கள்; இவர்கள் நோன்பை விட முடியாது [6]. தடிமல், அதேபோல சாதாரணமாக வரக்கூடிய கால்வலி, தலை வலி, வயிற்று வலி போன்ற நோய்கள் இதுவும் நோய்தான், இருந்தாலும் இதனால் நோன்புக்கு எந்த பாதிப்பும் இல்லை [6]. எனவே இவர்கள் நோன்பை விடக்கூடாது, இவர்கள் நோன்பு பிடிக்க வேண்டும் [6]. இன்னும் ஒரு வகையான நோயாளிகள் இருக்கிறார்கள், அவர்களால் நோன்பு பிடிக்க முடியும், ஆனால் நோன்பை விடுவதும் அனுமதிக்கப்பட்டது என்ற நிலையில் அவர்கள் இருப்பார்கள் [6].
அந்த அடிப்படையில், இப்ப இந்த கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்ட ஒருவர், நோன்பு பிடிப்பதால் அவருடைய உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் சொல்வார்களாக இருந்தால், அவர்கள் நோன்பு பிடிப்பதில் பிரச்சனை இல்லை [7]. அதே நேரத்தில் அவர்கள் நோன்பை விட விரும்பினால் விடுவதிலும் குற்றமில்லை; அவர்கள் விடுவதனால் அல்லாஹுத்தஆலா அவர்களை குற்றம் பிடிக்க மாட்டான் [7]. அந்த நோன்பை அவர்கள் பிறகு கழா செய்து கொள்ள வேண்டும் [7]. அதே நேரத்தில் நோன்பு பிடித்தால் உடல்நிலை பாதிக்கப்படும், உயிருக்கு ஆபத்து வரும் என்ற நிலையில் உள்ள நோயாளிகளை பொறுத்தவரையில் அவர்கள் கண்டிப்பாக நோன்பு பிடிக்க கூடாது [7]. ஏனென்றால் அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே உங்களையே நீங்கள் அழிவுக்குள் தள்ளி விடாதீர்கள், உங்களை நீங்கள் அழித்துக் கொள்ளாதீர்கள் என்று சொல்லுகிற காரணத்தினால், நோன்பு பிடிப்பதன் மூலம் உடலுக்கு அல்லது உயிருக்கு ஆபத்து வரும் என்கிற நிலையில் உள்ள நோயாளிகள் நோன்பை பிடிப்பது கூடாது; அவர்கள் நோன்பை விடுவது கடமையாகும் [7]. எனவே இந்த நிலையில் நீங்கள் உங்களுடைய நிலைமையை வைத்து முடிவெடுத்து கொள்ளுங்கள் [7].