Dr. ஷேக் முபாரக் மதனி

கொட்டாவி விடும்போது 'ஹா' என்ற சத்தத்தோடு கொட்டாவி விடலாமா?

கொட்டாவி ஷைத்தான் சுன்னத் ஒழுக்கம்

← முந்தையஅடுதது →
கேள்வி
கொட்டாவி விடும்போது 'ஹா' என்ற சத்தத்தோடு கொட்டாவி விடலாமா?
பதில்
பதில்:

பொதுவாக இஸ்லாம் அழகிய பண்பாடுகளை, நல்ல மேனர்ஸ்களை (Manners) கற்றுத் தரக்கூடிய மார்க்கமாக இருக்கிறது [3]. அந்த அடிப்படையிலே மற்றவர்களோடு உட்கார்ந்திருக்கிற போது என்ன மேனர்ஸை கடைபிடிக்க வேண்டும் என்பதை எல்லாம் இஸ்லாம் சொல்லுகிறது [3]. அந்த தொடரிலேதான் கொட்டாவியை பற்றியும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு சொல்லித் தருகிறார்கள் [3]. புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களிலே வரக்கூடிய ஒரு செய்தி, அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹுத்தஆலா நிச்சயமாக தும்மலை விரும்புகிறான், கொட்டாவி விடுவதை வெறுக்கிறான் [3]. ஒருவர் தும்மி அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னால், அதை கேட்டு கொண்டிருக்கிற முஸ்லிம்கள் அவருக்கு யர்ஹமுக்கல்லாஹ் என்று சொல்ல வேண்டும் [3]. கொட்டாவியை பொறுத்தவரையில் அது ஷைத்தானிடமிருந்து வரக்கூடியதாகும் [3]. எனவே முடியுமானவரை அந்த கொட்டாவியை தடுத்து கொள்ளட்டும் [3].

அதே நேரத்தில் கொட்டாவி விடுகிற நேரத்தில் 'ஹா' என்று சொன்னால் அதை பார்த்து ஷைத்தான் சிரிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் [4]. இந்த ஹதீஸிலே கொட்டாவி விடுவது என்பது வெறுக்கத்தக்க ஒரு செயல் என்பதையும், மனிதனுடைய இயல்பினால் பலவீனத்தினால் கொட்டாவி வந்தால் அந்த கொட்டாவியை அவன் சத்தமிட்டு 'ஹா' என்று விடாமல் தன்னுடைய கைகளால் அதை தடுத்து வராமல் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தருவதை நாம் பார்க்கிறோம் [4]. அதே நேரத்தில் கொட்டாவியை நாம் கட்டுப்படுத்துகிற போது எந்த கையை பயன்படுத்துவது என்பதை பொறுத்தவரையில், உலமாக்கள் இடது கையை பயன்படுத்தினால் நல்லது என்று கூறுகிறார்கள் [4]. ஏனென்றால் பொதுவான ஒரு விதி, தீங்குகள் அசிங்கமான விஷயங்களுக்கு இடது கையை பயன்படுத்த வேண்டும் என்று [4]. ஆனால் இதிலே ரசூல் (ஸல்) அவர்கள், அவனுடைய கையை கொண்டு வாயில் வைத்து கொட்டாவியை தடுக்கட்டும் என்று சொன்ன ஒரு செய்தியை நாம் முஸ்லிமிலே பார்க்கிறோம் [4].

எந்த கையை என்று ரசூல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டு கூறாத காரணத்தினால், அவரவருடைய வசதிக்கேற்ப அதை தடுத்துக் கொள்ளலாம் [5]. ஆனால் கொட்டாவி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் [5]. கொட்டாவி வந்தால் அதை வாயில் கையை வைத்து கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் [5]. கொட்டாவியை 'ஹா' என்ற சத்தத்தோடு விடுவது என்பது ஷைத்தானை மகிழ்விக்கக் கூடிய ஒரு விஷயம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [5]. நிச்சயமாக ஒரு முஃமின் ஷைத்தானை மகிழ்விக்கக்கூடிய எந்த ஒரு காரியத்தையும் செய்யக்கூடாது, செய்ய மாட்டான் [5].

← முந்தையஅடுதது →