அல்ஹம்துலில்லாஹ் வஸலாத்து வஸ்ஸலாம் அலா ரசூலில்லா அம்மாபாத் துஹா தொழுகையை பொறுத்தவரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேணித்தொழுது வந்த ஒரு தொழுகையாக இது காணப்படுகிறது [16]. அதேபோல விசேடமாக அபூஹுரைரா அபுதர்தா ரலியல்லாஹு அன்ஹுமா போன்ற நபித்தோழர்களுக்கு லுஹா தொழுகையை விட வேண்டாம் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வசியத் செய்ததாக ஹதீஸ்களை நாம் பார்க்கிறோம் [16]. அதற்குப் பிறகு அவர்களும் அந்த தொழுகையை விடாமல் தொழுது வந்ததை நாம் அவதானிக்க முடிகிறது [16]. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த துஹா தொழுகையை நிறைவேற்றி ிறார்கள் இந்த லுஹா தொழுகையை மூன்று பெயர் கொண்டு நாம் ஹதீஸ்களில் பார்க்க முடிகிறது [16]. ஒன்று ஸலாத்து துஹா இன்னும் ஒன்று அல் இஸ்ராக் என்கிற தொழுகை இன்னுமொன்று ஸலாத்துல் அவ்வாபீன் என்கிற தொழுகை இந்த மூன்றுமே துஹா தொழுகையைதான் குறிக்கும் என்று இமாம்கள் குறிப்பிடுகிறார்கள் [16]. இந்த தொழுகையினுடைய ரக்காத்துக்களை பொறுத்தவரையில் இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக நாம் அதை தொழலாம் நபி ஸல்லம் அவர்கள் நான்கு ரக்காத் தொழுவதாக சில ஹதீஸ்களில் நாம் பார்க்கிறோம் [16].
ஒருவருடைய நிலைமையையும் அவருடைய ஆர்வத்தையும் பொறுத்து அந்த தொழுகையினுடைய எண்ணிக்கையை அவர் ஆக்கி கொள்ளலாம் [17]. இந்த லுஹா தொழுகையினுடைய நேரத்தை பொறுத்தவரையில் அதாவது சூரியன் அதிகாலையில் உதித்து சுமார் ஒரு 15 நிமிடங்கள் கழிந்து இந்த தொழுகையினுடைய நேரம் ஆரம்பமாகும் [17]. சூரியன் உதித்து ஒரு 15 நிமிடம் நிமிடங்கள் கழித்து லுஹா தொழுகையினுடைய நேரம் ஆரம்பமாகும் சூரியன் உச்சிக்கு செல்வதற்கு ஒரு 10 நிமிடங்களுக்கு முன்னால் அதனுடைய நேரம் முடிந்துவிடும் [17]. சூரியன் உச்சிக்கு செல்வதற்கு ஒரு 10 நிமிடங்களுக்கு முன்னால் அதனுடைய நேரம் முடிந்துவிடும் [17]. இந்த தொழுகையை தொழுவதற்குரிய சிறந்த நேரம் என்ன என்பதை ஹதீஸ்கள் பார்க்கும்போது சூரியன் உதிப்பதற்கும் உச்சிக்கு போவதற்கும் இடையில் உள்ள இந்த நேரம் அதாவது சூரி சூரியன் உதித்ததிலிருந்து உச்சிக்கு செல்லுகிற வரைக்கும் உதாரணமாக ஆறு மணி நேரங்கள் இருக்கும் என்று சொன்னால் அந்த நடுவிலே வரக்கூடிய நேரம்தான் மிக சிறந்த நேரம் அதாவது சூரியன் கொஞ்சம் சூடாகி கொண்டு வரக்கூடிய நேரம் தான் லுஹாவினுடைய சிறந்த நேரமாகும் [17]. முதல் நேரத்தில் தொழுதாலும் அந்த தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும் [17].
இறுதி நேரத்தில் தொழுதாலும் அந்த தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும் [18]. நடுநேரத்தில் தொழுதாலும் அந்த அந்த தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை நம்ம புரிந்து கொள்ள வேண்டும் [18]. லுஹா தொழுகையினுடைய சிறப்புகள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிறையவை சொல்லி இருக்கிறார்கள் [18]. எனவே முடியுமானவரை இந்த தொழுகையை பேணி தொழக்கூடியவர்களாக நாம் மாற வேண்டும் [18]. அல்லாஹுத்தஆலா அதற்கு நமக்கு தவபீக் செய்வானாக [18]. வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ [18].