Dr. ஷேக் முபாரக் மதனி

பெண்கள் அழகு நிலையம் வைக்கலாமா?

பெண்கள் அழகு நிலையம் அலங்காரம் உணவு

← முந்தையஅடுதது →
கேள்வி
பெண்கள் அழகு நிலையம் வைக்கலாமா?
பதில்
பதில்:

பெண்கள் அழகு நிலையங்கள் வைக்கலாமா இன்றைய காலத்தில் இந்த அழகு நிலையங்கள் என்பது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒன்றாக காணப்படுகிறது [12]. அதில் குறிப்பாக ஆண்களும் பெண்களுக்குரிய அழகு நிலையங்களை நடத்துகிறார்கள் [12]. அந்த அழகு நிலையங்களுக்கு பெண்கள் போவது தெளிவாக கூடாது என்பது எல்லோரும் அறிந்த ஒரு விஷயமாகும் [12]. இப்போது பெண்கள் பெண்களுக்கான அழகு நிலையங்களை அமைக்கலாமா என்று கேட்டால் பல நாடுகளில் பார்க்கிற போது பெண்களால் உருவாக்கப்பட்டு நடத்தப்படக்கூடிய அழகு நிலையங்களில் மார்க்கத்திற்கு முரணான பல விஷயங்கள் அங்கே நடப்பதை நாம் பார்க்கிறோம் [12].

அதிலே குறிப்பாக போலி நகங்கள் வைக்கப்படுவது போலி முடி வைக்கப்படுவது இவைகள் எல்லாம் நேரடியாக ஹதீஸ்களிலே தடுக்கப்பட்ட விஷயங்களாகும் அதேபோல பெண்களுக்கு பர்பயூம் வாசனை திரவியங்களை பயன்படுத்துவது கண்புருவங்களை அகற்றுவது அல்லது கண்புருவ ளை டிசைன் பண்ணி விடுவது இப்படி பல மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் அவற்றிலே நடைபெறுகின்றன அதேபோல வளர்ச்சி அடைந்த சில இடங்களிலே பெண்களுடைய அவுரத்துகளை பெண்கள் பார்க்கக்கூடிய நிலை இவைகள் எல்லாம் இருக்கின்றன இவ்வாறான ஒரு அழகு நிலையமாக அல்லது மார்க்கத்திற்கு முரணான விஷயங்கள் அப்ப நாம குறிப்பிட்ட இல்லாமை இல்லாவிட்டாலும் கூட ஒரு சில மார்க்கத்திற்கு முரணான விஷயங்கள் நடக்கக்கூடிய அழகு நிலையங்கள் க இருக்குமாக இருந்தால் அந்த அழகு நிலையங்கள் கண்டிப்பாக மார்க்கம் அனுமதிக்காதவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [13].

இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்ட நிலையில் ஒரு அழகு நிலையத்தை ஒருவர் திறக்க விரும்பினால் அதை கூடாது என்று நாம் சொல்ல முடியாது ஆனால் அப்படி ஒரு அழகு நிலையத்தை நடத்த முடியுமா என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குரிய விஷயமாக இருக்கிறது எனவே அல்லாஹுத்தஆலா அவன் நமக்கு அனுமதித்த வழிகளில் நாம் நம்முடைய அழகையும், அலங்காரத்தையும் பேணிக்கொள்ள முயற்சி வேண்டும் [14]. இதை தாண்டி நாம் செல்லுகிற போது நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய பாவிகளாக நாம் நிற்க வேண்டி ஏற்படும் [14]. உதாரணமாக கண்புருவங்களை நீக்குகிறவர்கள் லானத் செய்யப்பட்டிருக்கிறார்கள் [14]. பல்லை உராய்ந்து அழகுபடுத்த கூடியவர்கள் லானத் செய்யப்பட்டிருக்கிறார்கள் [14]. போலி முடிக்க வைக்க கூடியவர்கள் லானத் செய்யப்பட்டிருக்கிறார்கள் [14]. ஆண்களுக்கு முன்னால் வாசனை திரவியங்களை பூசி கொண்டு வரக்கூடிய பெண்கள் விபச்சாரிகள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் [14]. அந்த தலைமுடியை மேலே கட்டி கொள்வதையும் ரசூல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள் [14]. எனவே இந்த விஷயங்களில்ிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும் [14].

அல்லாஹுத்தஆலா அதற்கு தவபீக் செய்வானாக [15]. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ [15].

← முந்தையஅடுதது →