Dr. ஷேக் முபாரக் மதனி

ஆண் விலாஎலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்று கூறப்படுவது உண்மையா?

படைப்பு ஆதம்(அலை) ஹவ்வா(அலை) விலா எலும்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
ஆண் விலாஎலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்று கூறப்படுவது உண்மையா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் லாஸலாம் ரசூலில் ஆணுடைய விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் என்று குர்ஆனில் இடம்பெறவில்லை [19]. மாறாக ஹதீஸ்களிலே ஆணுடைய விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டதாக வருகிறது [19]. இதுவும் படைப்பின் ஆரம்பத்தை பற்றி சொல்லக்கூடிய செய்தியாகும் [19]. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹுத்தஆலா களிமண்ணிலிருந்து படைத்தான் [19]. அவர்களிலிருந்து அவர்களுடைய விலா எலும்பிலிருந்து ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்தான் என்பதுதான் இதனுடைய அர்த்தமே தவிர இது உலகத்தில் பிறக்கிற எல்லோருக்கும் பொதுவானது என்று புரிந்து கொள்ள கூடாது பொதுவாக இப்போது நடைமுறையில் உள்ள அல்லாஹுத்தஆலா குர்ஆனில் சுட்டிக்காட்டக்கூடிய விஷயம் மனிதன் துள்ளி குதித்துச் செல்லக்கூடிய நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளான் [19]. எனவே இப்போது மனிதன் படைக்கப்படுவது ஆணும் பெண்ணும் தாம்பத்திய வாழ்க்கையில் சேர்வதன் மூலம் அவர்கள் உடலுறவு கொள்வதன் மூலம் ஆணுடைய உயிரணுவும் பெண்ணுடைய சினை முட்டையும் சந்திப்பதனால் ஏற்படக்கூடிய அந்த நிகழ்வினால் தான் இப்போது மனிதன் பிறக்கிறான் என்பதுதான் குர்ஆனும் ஹதீஸும் சொல்லக்கூடிய வழிகாட்டலாக இருக்கிறது வல்லாஹுத்தஆலா ஆலம் [19].

← முந்தையஅடுதது →