Dr. ஷேக் முபாரக் மதனி

குனூதோதும் இமாமுக்கு பின்னாடி நின்று தொழலாமா?

குனூத் சுபஹ் இமாம் பித்அத்

← முந்தையஅடுதது →
கேள்வி
குனூதோதும் இமாமுக்கு பின்னாடி நின்று தொழலாமா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன் ஸலாத்து ஸலாம் முசல இந்த கேள்வியை பொறுத்தவரையில் ஓதக்கூடிய இமாமுக்கு பின்னால் நின்று தொழலாமா? [16]. இதிலே இரண்டு பகுதிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது [16]. முதலாவது பகுதி சுபுஹ் தொழுகையில் குனூத் ஓதுவது மார்க்கத்தில் உள்ள ஒன்றா என்பது [16]. இதைப் பொறுத்தவரையில் சுபஹுத் தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பாக இஸ்லாம் அறிஞர்கள் மத்தியிலே கருத்து வேறுபாடு காணப்படுகிறது [16]. குறிப்பாக இமாம் அபூ ஹனீபா இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்கள் சுபஹு தொழுகையில் குனூத் கிடையாது [16]. அது மார்க்கத்தில் உள்ள ஒன்று அல்ல என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் [16]. இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹ் அதேபோன்று அவர்களுடைய மத்ஹபை சேர்ந்த இமாம்கள் சுபஹுலே குனுத் ஓதுவது முஸ்தஹப்பாகும் [16]. அதே நேரத்தில் ஒருவர் சுபஹு தொழுகையில் குனுத்தை வேண்டுமென்றோ அல்லது மறதியாகவோ விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் [16]. மாலிக் மத்ஹபை சேர்ந்த ஒரு சில அறிஞர்கள் சுப தொழுகையில் குனூத் இல்லை என்கிற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் [16]. ஷாபி மத்ஹபை சேர்ந்த உலமாக்கள் சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவதை சுன்னா என்று குறிப்பிடுகிறார்கள் இப்படி மூன்று கருத்துக்கள் உலமாக்கள் மத்தியிலே காணப்படுகிறது [17]. இதிலே ஷாபி மத்ஹபையும் மாலிக் மத்ஹபையும் பொறுத்தவரையில் அவர்கள் இரண்டு ஆதாரங்களை முன்வைக்கிறார்கள் [17]. ஒன்று பொதுவாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடர்ச்சியாக பிரச்சினையின்போது குணத்து ஓதி வந்த ஹதீஸ்களை முன் வைக்கிறார்கள் [17]. அதேபோன்று லம்யல் அன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்யா என்று வரக்கூடிய ஒரு செய்தியை முன்வைக்கிறார்கள் அதாவது ரசூல்லாஹம் அவர்கள் உலகத்தை விட்டு பிரியும் வரையும் சுபஹுலே குனூத் ஓதிக் கொண்டிருந்தார்கள் என்று இந்த இரண்டு செய்திகளையும் ஆதாரமாக வைத்து சுபஹுலே குனூத் ஓதுவது சுன்னத் என்கிற கருத்து அவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கிறது [17]. இந்த கருத்துக்களுக்குள் மிகச் சரியான கருத்து எது என்று நாம் ஆய்வு செய்கிற போது இமாம் அபூ ஹனீபா இமாம் அஹ்மது இப்னு ஹம்பல் ரஹிமுஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்களால் முன்வைக்கப்படக்கூடிய கருத்துதான் ஆரோக்கியமானதாகவும் சரியானதாகவும் தென்படுகிறது [17]. ஏனென்றால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உலகத்தை விட்டு பிரியும் வரையும் சுபஹிலே குனூத் ஓதினார்கள் என்கிற ஹதீஸ் பலவீனமானதாகும் [18]. பலவீனமான ஹதீஸை கொண்டு ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு உண்மையாகும் [18]. அடுத்ததாக பொதுவாக வரக்கூடிய அந்த ஹதீஸ்கள் அது குனூத்துன் நாஸிலாவை குறிக்குமே தவிர, பிரச்சினைகளின் போது குனூத் ஓதுவதை குறிக்குமே தவிர, வழமையாக பஜிர் தொழுகைக்கு மாத்திரம் ஓதப்படுகிற குனத்தை குறிக்காது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் [18]. அதேபோன்று உண்மையிலேயே குனூத் என்ற சுபுஹுக்கு குனூத் என்ற ஒன்று இருந்திருந்தால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதில் எதை ஓதினார்கள் என்பது நிச்சயமாக பதிவாகி இருக்கும் [18]. அவ்வாறு எந்த செய்திகளும் கிடையாது என்பதும் இங்கே நாம் கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாகும் [18]. நான்காவதாக அபுமாலிக் அஷா அஷ் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள் [18]. இது திருமிதி நசாயி போன்ற ஹதீஸ் நூல்களிலே பதிவு செய்யப்பட்ட இமாம் திருமிதி அவர்கள் சஹீஹீ என்று குறிப்பிட்டு ஒரு செய்தியாகும் அபூமாலக் அஷ என்பவர் தன்னுடைய தந்தையிடம் கேட்கிறார் தந்தையே நீங்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பின்னாலும் அபூபக்கர் உமர் உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு போன்றவர்களுக்கு பின்னாலும் அதேபோன்று இங்கே கூபாவிலே சுமார் ஐந்து வருடங்கள் அலி ரலியல்லாஹு அவர்களுக்கு பின்னாலும் தொழுதி இருக்கிறீர்கள் [19]. இவர்கள் யாராவது சுபஹலே குனூத் ஓதினார்களா என்று அவர் கேட்டபோது அவருடைய தந்தை சொல்கிறார் மகனே இது முஹ்தத் சுபஹிலே குனூத் ஓதுவது புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும் என்று சொல்கிறார் நஸாயிலே வரக்கூடிய ரிவாயத்தில் மகனே அது பிதத் என்று சொல்கிறார் எனவே இவ்வாறான காரணங்களின் அடிப்படையிலே சுபஹிலே குனூத் ஓதுவது என்பது மார்க்கத்தில் உள்ள ஒன்று அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் சில அறிஞர்கள் இதை பித்அத் என்று கூட குறிப்பிடுவதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டி இருக்கிறது [19]. அடுத்த பகுதி சுபஹுலே குனூத் ஓதக்கூடிய இமாமுக்கு பின்னால் நின்று நாம் தொழலாமா என்று கேட்டால் சுபஹுலே குனுத் ஓதுவதை பித்அத் என்று எடுத்துக்கொண்டால் பிதத் செய்யக்கூடிய இமாமுக்கு பின்னால் நின்று நாம் தொழலாமா என்கிற கேள்வி வரும் [20]. உண்மையிலேயே பிதத்தை பொறுத்தவரையில் உலமாக்கள் அஹலு சுன்னாவல் ஜமாஅத்தை சேர்ந்த உலமாக்கள் பிதத்தை இரண்டாக பிரிக்கிறார்கள் [20]. ஒன்று பிதஆ முகரா என்று சொல்லக்கூடிய மார்க்கத்தை விட்டு வெளியேற்றக்கூடிய பிதத்துகள் [20]. இன்னும் ஒொன்று பிதா முஃபஸிகா என்று சொல்லக்கூடிய பாவத்தை ஏற்படுத்தக்கூடிய பிதத்துகள் [20]. பிதா முக்கபிரா என்று சொல்லக்கூடிய மார்க்கத்தை விட்டு வெளியேற்றக்கூடிய பிதத்தை ஒருவர் செய்தால் அவருக்கு பின்னால் நின்று தொழுவது கூடாது [20]. உதாரணமாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறகு ஒரு நபி வர முடியும் என்று ஒருவர் கூறுவது என்பது மார்க்கத்தில் ஏற்படுத்தப்படக்கூடிய ஒரு புதுமையாகும் [20]. ஆனால் இந்த பிதத் அவரை மார்க்கத்தில்ிருந்து வெளியேற்றி விடும் இந்த கருத்துள்ள ஒருவருக்கு பின்னால் நின்று தொழ முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது [20]. அதேபோன்று அல்ஹுலுல் வல்த்திஹாத என்று சொல்லக்கூடிய அல்லது வஹதத்துல் உஜூத் என்று சொல்லக்கூடிய கொள்க இயல்வனையாவும் இறையுருவே அல்லது எல்லா வஸ்துக்களிலும் அல்லாஹ் சங்கமிப்பான் போன்ற அந்த கருத்துக்களை பொறுத்தவரையில் இதுவும் பிதத்தானதாகும் ஆனால் இது பிதா முக்கிரா இப்படியான பித ஒரு இமாமுக்கு பின்னால் என்று தொழ முடியாது [21]. பிதா முபசிக்கா என்று சொல்லக்கூடிய பிதத்துகளை பொறுத்தவரையில் அந்த பிதத்துகள் பாவத்தை ஏற்படுத்த கூடியவையாகும் [21]. அவ்வாறான பிதத்துக்களை செய்கிற இமாம்களுக்கு பின்னால் நின்று தொழுவது கூடும் என்பது அஹலு சுன்னாவல் ஜமாத்தை சேர்ந்த உலமாக்கள் அனைவரதும், ஏகோபித்த முடிவாக இருக்கிறது [21]. அந்த அடிப்படையில், சுபஹுலே குளுத் ஓதுவது பிதத் என்ற, கருத்தை நாம் எடுத்துக்கொண்டால், சுபஹுலை குணுத்த ஓதக்கூடிய இமாமுக்கு பின்னால் நின்று நாம் தொழலாம் [21]. ஏனென்றால் அந்த பித்அத் அகீதாவோடு உள்ள அல்லது இஸ்லாத்தை விட்டு வெளியேற்றக்கூடிய பிதத் கிடையாது என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [21]. அதே நேரத்தில் அன்புள்ள சகோதரர்களே, இந்த சுபஹுலே குனுத் ஓதுவது மார்க்கத்தில் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கிற மக்கள் ஓதக்கூடிய பள்ளிகளுக்குள் போய் சங்கடப்படுவதை விட அவர்களுடைய ஊர்களிலே குனூத் ஓதாத பள்ளிகள் இருக்குமாக இருந்தால் அந்த பள்ளிகளுக்குள் அவர்கள் செல்வதுதான் சிறந்ததாகும் [22]. ஏனென்றால் குனூத் ஓதுகிற பள்ளிக்கு போய் இவர்கள் குனூத் ஓதாமல் நிற்கிற போது அதன் மூலம் பல பிரச்சினைகளும் சர்ச்சைகளும் உருவாக வாய்ப்பிருக்கிறது [22]. எனவே ஒரே ஊரில் குனூத் ஓதுகிற ஒரு பள்ளி இருக்கிறது [22]. குனூத் ஓதாத ஒரு பள்ளி இருக்கிறது என்றால் குனூத் ஓத தேவையில்லை என்று கருதுகிற சகோதரர்கள் அல்லது குனூத் ஓதக்கூடாது என்று எண்ணக்கூடிய சகோதரர்கள் குனூத் ஓதாத பள்ளிக்கு செல்வது சிறந்தது என்பதையும் நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [22]. வல்லாஹுத்தஆலா ஆலம் [22].

← முந்தையஅடுதது →