அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் ரசூலில்லாம் ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள் பிரதானமான ஒன்றுதான் அவரை குளிப்பாட்டி கபனிட்டு அவருக்காக வேண்டி ஜனாஸா தொழுகை நடத்தி அவரை நல்லடக்கம் செய்வது [12]. ஊரிலே ஒருவர் மௌத் ஆகிறார் நாம் போகக்கூடிய தூரத்தில் ஒருவர் மௌத் ஆகிறார் என்றால் அந்த ஜனாஸாவிலே நாம் கலந்து கொள்வது மிகப்பெரிய ஒரு இபாதத்தாகும் [12]. எந்த அளவுக்கு என்றால் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ஒருவர் ஒரு மையத்தை தொழுகின்ற இடம் வரைக்கும் பின்துயர்ந்து சென்றால் அவருக்கு ஒரு கிரீாத் நன்மை கிடைக்கும் [12]. தொழுதுவிட்டு அடக்கம் செய்கிற இடம் வரைக்கும் அதை பின்யர்ந்து சென்றால் இன்னும் ஒரு கிராத் நன்மை கிடைக்கும் என்றார்கள் [12]. சஹாபாக்கள் கேட்டார்கள் கிராத் என்றால் என்ன என்று ரசூலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ஒரு கிராத் என்பது ஒரு உஹது மலை அளவு என்று சொன்னார்கள் [12]. எனவே ஒருவர் ஒரு ஜனாஸா தொழுகையில் பூரணமாக கலந்து கொள்ளும் போது அவருக்கு இரண்டு உகது மலை அளவு நன்மை கிடைக்கும் அல்லாஹுத்தஆலா அதற்கு நமக்கு தவபீக் செய்ய வேண்டும் [13]. அதே நேரத்தில் வெளி நாட்டில் அல்லது வெளியூரில் அல்லது நம்முடைய கண்ணுக்கு எட்டாத நமக்கு தெரியாத இடங்களில் ஒருவர் மரணித்துருக்கிறார் என்றால், அவருக்கு நாம், ஜனாஸா தொழுகை நம்முடைய ஊரில், தொழுவதைத்தான், காய்ப் ஜனாஸா தொழுகை என்று குறிப்பிடுவார்கள் [13]. இவ்வாறு தொழுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டால் இதிலே இமாம்கள் மத்தியிலே இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் கடுமையான கருத்து வேறுபாடு இருப்பதை நாம் பார்க்கலாம் [13]. ரசூலல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காயிப் ஜனாஸா தொழுகை தொழுதி இருக்கிறார்களா என்று கேட்டால் அவர்கள் நஜ்ஜாஷி என்று சொல்லக்கூடிய அந்த அபிசீனிய மன்னருக்காக வேண்டி மதீனாவில் ஜனாஸா தொழுகையை நடத்தியதாக சஹீஹான ஹதீஸ்கள் இருக்கின்றன [13]. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்துதான் அந்த கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன [13]. ஒரு சாரார் காய்ப் ஜனாஸா பொதுவாக தொழலாம் என்கிற கருத்தை முன் வைக்கிறார்கள் [13]. அவர்களிடம் எந்த அடிப்படையில் என்று கேட்டால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்ஜாசிக்கு தொழுதி இருக்கிறார்கள் [14]. எனவே நாம் தொழலாம் என்று சொல்கிறார்கள் [14]. இன்னும் ஒரு சாரார் காயிப் ஜனாஸா நாம் பொதுவாக தொழ முடியாது என்று சொல்கிறார்கள் ஏன் என்று கேட்டா ரசூல்லாஹ ஸல்லம் அவர்கள் நஜ்ஜாசிக்கு மட்டும்தான் தொழுதார்கள் இது அல்லாமல் நிறைய சஹாபாக்கள் அல்லது சில சஹாபாக்கள் அவருடைய காலங்களில் தூரடங்களில் மௌத்தாகி இருக்கிறார்கள் [14]. அப்படியான மக்களுக்காக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ராயிப் ஜனாஸா தொழுததாக எந்த ஆதாரமும் இல்லை என்று சொல்கிறார்கள் [14]. இப்ப இது கருத்து வேறுபாட்டுக்குரிய ஒரு மஸலா என்பதை நாம புரிந்து கொள்ள வேண்டும் [14]. இதிலே ஒரு நடுநிலையான கருத்தாக இன்னும் சிலர் ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள் [14]. அதாவது பொதுவாக தொழுவது கூடும் என்று சொல்வதும் பொதுவாக தொழுவது கூடாது என்று சொல்வதும் பொருத்தமானது அல்ல [14]. இதிலே நடுநிலையான கருத்து என்னவென்றால் சமுதாயத்தில் முக்கியமானவர்கள் அதாவது முக்கியம் என்று சொல்லும்போது ஒரு நல்ல ஆட்சியாளர் அல்லது ஒரு பிரபல்யமான ஆலிம் இவ்வாறான யாராவது ஒருவர் மௌத்தாகிவிட்டால் அவருக்காகவேண் யப் ஜனாஸா தொழலாம் அதேபோன்று ஒருவருக்கு தொழுவிக்கப்படவில்லை என்கிற செய்தி ஒருவர் உதாரணமாக கடலில் சென்றவர் கடலில் மூழ்கி மரணித்து விட்டார் அவருக்கு யாருமே ஜனாஸா தொழுகை நிறைவேற்றவில்லை என்றால் அவருக்காக வேண்டி ஜனாஸா தொழுகை நிறைவேற்றலாம் என்ற கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் [15]. இவற்றிலே அல்லாஹுத்தஆலா ஆலம் ஒருவருக்கு ஜனாஸா தொழுகை நிறைவேற்றப்படவில்லை என்று நாம் அறிகிற போது அவருக்காக காயிப் ஜனாஸா தொழுகை தொழுது கொள்ளலாம் [15]. ஏனைய ஒரு தொழுவது என்பது தெளிவான ஆதாரங்கள் இல்லாத ஒரு விஷயமாகும் என்பதை நாம் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயற்பட வேண்டும் [15]. அல்லாஹுத்தஆலா அதற்கு நாம் எல்லோருக்கும் தவபீக் செய்வானாக வல்லாஹுத்தஆலா ஆலம் [15].
கேள்வி
காயிப் தொழுகையை பற்றி விளக்கவும்.
பதில்
பதில்: