Dr. ஷேக் முபாரக் மதனி

குழந்தை பிறந்ததும் 40 எடுப்பது கூடுமா?

குழந்தை நிஃபாஸ் 40 எடுப்பது பித்அத்

← முந்தையஅடுதது →
கேள்வி
குழந்தை பிறந்ததும் 40 எடுப்பது கூடுமா?
பதில்
பதில்:

ஒரு பெண் குழந்தை பெற்றுவிட்டால் அந்த குழந்தை பெறுகிற போது வெளியாகக்கூடிய இரத்தம் நிஃபாஸ் என்று அழைக்கப்படும் [23]. இந்த நிபாசினுடைய நிலை நீடிக்கும் வரைக்கும் ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் அந்த குழந்தை பெற்ற பெண்ணை பொறுத்தவரையில் அவர் தொழுவது நோன்பு நோட்பது போன்ற இபாதத்துகள் அவருக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது [23]. இந்த நிஃபாஸ் எப்போது நிற்குமோ அப்போது இருந்து அவர் குளித்துக்கொண்டு தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை செய்ய ஆரம்பிக்க வேண்டும் [23]. இந்த நிபாஸ் நிற்பது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்படும் [23]. சில பெண்கள் ஒரு வாரத்திலேயே நிபாசிலிருந்து சுத்தமாகி விடுவார்கள் [23]. சிலர் 15 நாட்கள் சிலர் ஒரு மாதம் போகும் [23]. சிலர் மேக்ஸிமம் 40 நாட்கள் வரைக்கும் அவர்களுக்கு இந்த நிலை இருக்கும் [23]. இந்த நிபாசிலிருந்து சுத்தமாகுவது என்பதை ஒருஃங்கஷனாக ஒரு விழாவாக அல்லது ஒரு விஷய நிகழ்வாக ஆக்கி கொள்வது என்பது மார்க்கம் காட்டி தராத ஒன்றாகும் [23]. இப்ப நிபாஸ் நின்றவுடன் அவர் செய்ய வேண்டியது குளித்துவிட்டு அவர் இபாதத்துக்களை செய்ய ஆரம்பிப்பதுதான் குறிப்பாக தொழுகை நோன்பு போன்ற இபாதத்துக்களை செய்ய ஆரம்பிப்பதுதான் அவருடைய கடமையாகும் [23]. இதல்லாமல் சில ஊர்களிலே நாம் பார்த்தால் 40 வரைக்கும் காத்திருந்து அந்த 40வது நாளில் அதை ஒரு விழாவாக சிறப்பான நாளாக ஆக்கி அன்று நினைத்து அதை கொண்டாடுவதை பார்க்கிறோம் இது மார்க்கம் காட்டி தராத ஒரு காரியமாகும் இவ்வாறான செயல்களில்ிருந்து நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும் வல்லாஹுத்தஆலா [23].

← முந்தையஅடுதது →