அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்து ஸலாம் அலா ரசூலில்லாஹ் அம்மா பாத் [8]. ஒருவர் தூங்கும்போது, சுபஹானல்லாஹ் 33 தடவைகள், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவைகள், அல்லாஹு அக்பர் 34 தடவைகள், அல்லது 33 பிளஸ் லாயிலாஹ இல்லல்லாஹ் ஒரு தடவை சொல்லிக் கொள்வதும், முஹ்விதாத் என்று சொல்லக்கூடிய குல் சூராக்களை ஓதி, தன்னுடைய கைகளில் ஊதி, உடம்பு முழுக்க முடியுமானவரை தடவிக்கொள்வதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்த வழிமுறையாக இருக்கிறது [8]. இதை நமக்கு செய்ய முடியாமல் போகும்போது இன்னுமொருவருடைய துணை கொண்டு அவ்வாறு செய்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி இருக்கிறது [8]. இப்ப நீங்கள் கேட்கக்கூடிய கேள்வி கேள்வி கணக்கு இல்லாமல் சுவர்க்கம் செல்லக்கூடிய 70,000 பேர் ஓதி ஊத மாட்டார்கள் என்று வருகிறது என்று கேட்கிறீர்கள் ஆனால் ஹதீஸில் அப்படி கிடையாது [8]. ஹதீஸில் எப்படி வருகிறது என்றால் லாயஸ்தருக்குன் அவர்கள் மற்றவர்களிடம் போய் தங்களுக்கு ருக்கியா செய்யுமாறு கேட்க மாட்டார்கள் என்று வருகிறது [8]. இப்ப மற்றவர்களிடம் போய் ருக்கியா செய்யுமாறு கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா தடுக்கப்பட்டதா என்று கேட்டால் மற்றவர்களிடம் போய் நமக்காக ருக்கியா ஓதி ஊதுமாறு கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது [8]. ஆனால் கேள்வி கணக்கு இல்லாமல் சுவர்க்கம் செல்லக்கூடிய 70ஆயிரம் பேருடைய பண்புகளில் தன்மைகளில் ஒன்று அவர்கள் மற்றவர்களிடம் போய் கேட்க மாட்டார்கள் ஆனால் அவர்கள் அவர்களுக்கு செய்து கொள்வதில் எந்த குற்றமும் இல்லை என்பதை நாம் இந்த ஹதீஸின் மூலம் புரிந்து கொள்ளலாம் எனவே இது இதனோடு முரண்பட மாட்டாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் வல்லாஹுத்தஆலா ஆலம் [8].
கேள்வி
தூங்கும்போது சூராக்களை ஓதி உடம்பில் தடவும் பழக்கம் உண்டு சில சமயம் எனது கணவர் ஓதி எனக்கு தடவுவார். மறுமையில் 70ாயிரம் பேர் கேள்வி கணக்கின்றி சுவனம் நுழைவர் அதில் ஓதி பார்ப்பவர்கள் கிடையாது ஆகவே எனது கணவர் செய்கின்ற செயல் இதில் அடங்குமா?
பதில்
பதில்: