Dr. ஷேக் முபாரக் மதனி

புதிய வீடு கட்டிய பின் மதரச மாணவர்களை கொண்டு குர்ஆன் ஓதுவது பிழையா?

புதிய வீடு குர்ஆன் மதரஸா பித்அத்

← முந்தையஅடுதது →
கேள்வி
புதிய வீடு கட்டிய பின் மதரச மாணவர்களை கொண்டு குர்ஆன் ஓதுவது பிழையா?
பதில்
பதில்:

அல்ஹம்துலில்லாஹ் ஸலாத்துஸலாம் ரசூலில் அன்புள்ள சகோதர சகோதரிகளே அல்குர்ஆன் ஓதப்படுவது குறிப்பாக வீடுகளில் அல்குர்ஆன் ஓதப்படுவது வலியுறுத்தப்பட்ட ஒரு வணக்கமாகும் [7]. ஆனால் புது வீடு கட்டினால் அந்த வீட்டிற்குள் நுழைவதற்காக குர்ஆன் ஓதுவது என்ற அந்த நியத்தோடு குர்ஆன் ஓதுவதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடையாது [7]. பொதுவாக வீடுகளில் குர்ஆன் ஓதுவது வலியுறுத்தப்பட்டது என்ற அடிப்படையில் புதிய வீட்டிலும் நாம் குர்ஆனை ஓதலாம் [7]. அந்த வீட்டில் குடி பூர்வதற்காக வேண்டி மாத்திரம் குர்ஆன் ஓதுவது என்பது ஆதாரம் இல்லாத ஒரு விஷயமாகும் [7]. அதே நேரத்தில் அதற்காக வேண்டி பள்ளிவாசலில் உள்ள இமாம்களையோ அல்லது மதரசாக்களில் ஓதக்கூடிய மாணவர்களையோ கொண்டு வந்து வீட்டில் உட்கார வைத்து அன்று கூட்டமாக ஒன்றாக இருந்து குர்ஆன் ஓதுவது என்பது மார்க்கம் அனுமதிக்காத குர்ஆன் ஹதீஸில் ஆதாரம் இல்லாத ஒரு நூதன விஷயமாகும் என்பதை நாம் கவனத்திலே கொள்ள வேண்டும் [7]. அது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் [7]. வல்லாஹுத்தஆலா ஆலம் [7].

← முந்தையஅடுதது →