இந்த கேள்வியை பொறுத்தவரையில் அடிக்கடி கேட்கப்படக்கூடிய ஒரு கேள்வியாகும் [2]. அதிலும் குறிப்பாக இரவு தொழுகையிலே ஈடுபாடுள்ள நபிலான வணக்கங்களில் ஆர்வமுள்ள சகோதர சகோதரிகளால் அடிக்கடி கேட்கப்படக்கூடிய ஒரு கேள்வியாகும் [2]. உண்மையிலேயே இரவு தொழுகை என்பது இஸ்லாத்தில் மிகவும் ஆர்வமூட்டப்பட்ட ஒரு வணக்கமாக இருக்கிறது [2]. அதற்குரிய நன்மைகளும் சிறப்புகளும் ஏராளமாக கூறப்பட்டிருக்கின்றன [2]. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவு தொழுகையில் மிக ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் ஹதீஸ்களிலே பார்க்கலாம் [2]. அல்லாஹுத்தஆலா நமக்கும் இரவு தொழுகையில் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் தந்தருள்வானாக [2]. அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த இரவு தொழுகையினுடைய பூரணமான அமைப்பு என்னவென்றால் ஒருவர் இஷாவுடைய சுன்னாவுல் சுன்னத் தொழுகை தொழுததிலிருந்து சுபஹுக்கு அதான் சொல்லப்படுகிற வரைக்கும் உள்ள இடைப்பட்ட நேரத்தில் தொழுவதை இது குறிக்கும் [2]. குறிப்பாக 11 ரக்காத்துக்கள் இரண்டு இரண்டாக எட்டு ரக்காத்துக்களும் பிறகு ஒரே அத்தஹியாத்தில் மூன்று ரக்காத்துக்களும் வித்ராக தொழு முடிப்பதுதான் இரவு தொழுகையினுடைய பூரணமான அமைப்பாகும் [3]. இந்த தொழுகையை ஒருவர் தூங்குவதற்கு முன்னாலும் தொழுதுவிட்டு தூங்கலாம் இடையில் எழுந்தும் தொழலாம் அல்லது இரவின் இறுதி பகுதியிலும் அவர் இந்த தொழுகையை தூங்கி எழுந்து தொழலாம் [3]. இரவின் மூன்றாவது பகுதியில் அதாவது இரவின் இறுதி பகுதியில் தூங்கி எழுந்து தொழுவதிலே ஒரு சிறப்பு இருக்கிறது என்னவென்றால் அந்த நேரத்தில் தான் அல்லாஹுத்தஆலா அடிவானத்திற்கு கீழ்வானத்திற்கு இறங்கி என்னிடம் பிரார்த்திப்பவர்கள் இருக்கிறார்களா என்னிடம் பாவ மன்னிப்பு தேடி யாராவது வந்திருக்கிறார்களா? அவர்களுக்கு நான் கொடுக்க வந்திருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்லுகிற நேரம் [3]. எனவே அந்த நேரத்தில் தொழுவது மிக மேலானது இந்த காரணத்தினால் [3]. இதல்லாமல் இரவு தொழுகையை இரவில் தொழுது கொள்ள வேண்டும் [3]. இரண்டு இரண்டு ரக்அத்துக்களாக எட்டும் இறுதியாக மூன்று ரக்த்துக்களை ஒரு அத்தஹியாத்திலும் தொழுது வித்ர் அது இந்த மூன்றும் தான் வித்ர் [3]. இப்படி தொழுவதுதான் இதனுடைய பூரணமான வடிவமாகும் [4]. இது அல்லாமல் ஒருவர் வித் மட்டுமே தொழ விரும்புகிறார் [4]. சொன்னால் இரவில் அதுவும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் [4]. சில சகோதரர்கள் தூங்குவதற்கு முன்னாலேயே இந்த வித்திரை தொழுதுவிட்டு தூங்குவார்கள் [4]. பிரச்சனை இல்லை அது மார்க்கம் நமக்கு அனுமதித்த ஒன்றுதான் [4]. இன்னும் சில சகோதரர்கள் தூங்கி எழுந்து பஜ்ருக்கு முன்னால் எழுந்து இந்த மூன்று ரக்காத்தை மட்டும் தொழுது இரவு தொழுகையை நிறைவேற்றிக் கொள்வார்கள் [4]. இதுவும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான் [4]. சில சகோதர சகோதரிகள் வளமையாக இரவிலே எட்டோ அல்லது ஆறோ நான்கோ தொழுது விட்டு வித்தரும் தொழுவார்கள் இப்படி வளமையாக தொழுது வரக்கூடிய சகோதர சகோதரிகள் சில நேரங்களில் அசதி காரணமாக டயட் காரணமாக வித்திரை நேர காலத்தோடு தொழுதுவிட்டு தூங்கி விடுவார்கள் இப்படி அவர்கள் தொழுதுவிட்டு தூங்குகிற போது அவர்களுடைய அந்த டயட்னஸ் போய் இடையிலே விழித்தழுகிற நேரத்தில் அவர்கள் வளமையாக தொழுது வந்த அந்த இரவு தொழுகை தொழ வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு வருகிறது [4]. அதனால்தான் இந்த கேள்வி அவர்கள் கேட்கிறார்கள் [4]. பொதுவாக இது தொடர்பாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லும்போது இரவு தொழுகையில் இறுதி தொழுகையாக வித்திரை ஆக்கி கொள்ளுங்கள் அப்படி சொல்றாங்க ஒரு செய்தி இன்னும் ஒரு ஹதீஸ் ஒரே இரவில் இரண்டு வித்தர்கள் இல்லை என்றும் சொல்கிறார்கள் [5]. அப்ப ரெண்டு டைம் வித்ரு தொழ முடியாது [5]. இதை அடிப்படையாக வைத்து இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியிலே கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன [5]. எப்படி என்று கேட்டால் ஒருவர் வித்ரு தொழுதுவிட்டு தூங்கிவிட்டால் பிறகு அவர் எழுந்து இரவு தொழுகை தொழலாமா? என்ற கேள்விக்கு ஒரு சாரார் அப்படி தொழ முடியாது ஏனென்றால் இரவின் இறுதி தொழுகை வித்ருதான் வித்ரை அவர் தொழுதுவிட்டார் [5]. எனவே அவர் அதற்குப் பிறகு தொழக்கூடாது என்று சொல்கிறார்கள் [5]. இன்னும் ஒரு சாரார் அவர் அதற்கு பிறகு இரவு தொழுகையை தொழலாம் [5]. ஆனால் அவர் வித்ரு திரும்ப தொழக்கூடாது என்று சொல்கிறார்கள் [5]. இதற்கு ஆதாரமாக ரசூல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வித்திருக்கு பிறகு இரண்டு ரக்காத் தொழுவார்கள் என்று வரக்கூடிய அந்த ஹதீஸை ஆதாரமாக முன் வைக்கிறார்கள் [5]. இப்ப சுருக்கமாக இந்த மஸ்லா இஜிஹா அதுக்குரிய கருத்து வேறுபாட்டுக்கு இடம்பாடான ஒரு மஸலா என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் [6]. எனவே இதுல நம்ம எடுக்க வேண்டிய முடிவு என்று பார்க்கிற போது ஒருவர் பூரணமாக 11 ரக்காத்துக்கள் தொழுதுவிட்டு தூங்கிவிட்டால் பிறகு எழுந்திருக்கிறார் [6]. அந்த நேரத்தில் மீண்டும் இவர் தொழலாமா என்று கேட்டால் இவர் விரும்பினால் இரண்டு ரக்காத்துக்கள் தொழுது கொள்ளலாம் ஏனென்றால் ரசூல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதி இருக்கிறார்கள் [6]. வித்ரு மட்டுமே தொழுதுவிட்டு தூங்கக்கூடிய ஒருவர் எழுந்திருந்தால் அவர் இதற்கு பிறகு இரவு தொழுகை தொழுவதா என்பதை பொறுத்தவரையில் நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்த கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் வல்லாஹு ஆலம் அவர் அந்த ரசூல்லாஹம் அவர்கள் தொழுதார்கள் என்று வரக்கூடிய அந்த இரண்டு ரக்காத் தொழுகையோடு போதுமாக்கி கொண்டால் போதுமானது வல்லாஹுத்தஆலா ஆலம் [6].
கேள்வி
இஷாத் தொழுகையை தொடர்ந்து வித்ரு தொழுகையை தொழுத பின் நள்ளிரவு மூணு மணி அளவில் தஹஜ்ஜத் தொழுகையை தொழலாமா?
பதில்
பதில்: