حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، المَعْنَى وَاحِدٌ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي المَلِيحِ بْنِ أُسَامَةَ، عَنْ أَبِي عَزَّةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً، أَوْ قَالَ: بِهَا حَاجَةً
هَذَا حَدِيثٌ صَحِيحٌ وَأَبُو عَزَّةَ لَهُ صُحْبَةٌ وَاسْمُهُ يَسَارُ بْنُ عَبْدٍ، وَأَبُو المَلِيحِ اسْمُهُ عَامِرُ بْنُ أُسَامَةَ بْنِ عُمَيْرٍ الهُذَلِيُّ، وَيُقَالُ: زَيْدُ بْنُ أُسَامَةَ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு (குறிப்பிட்ட) இடத்தில் ஓர் அடியார் இறப்பார் என அல்லாஹ் தீர்மானித்துவிட்டால், ‘அந்த இடத்தில்’ அல்லது ‘அங்கு’ அவருக்கு ஒரு தேவையை அவன் ஏற்படுத்திவிடுவான். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. திர்மிதீ இமாம் கூறுகிறார்: இது ‘ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஅஸ்ஸா (ரலி) அவர்கள் நபித்தோழர் ஆவார். அன்னாரின் இயற்பெயர், யஸார் பின் அப்த் ஆகும். (மேற்கண்ட ஹதீஸின் இரண்டாம் அறிவிப்பாளரான) அபுல்மலீஹ் அவர்களின் இயற்பெயர், ஆமிர் பின் உஸாமா பின் உமைர் அல்ஹுதலீ ஆகும். இவரை ஸைத் பின் உஸாமா என்றும் கூறப்படுகிறது.
அறிவிப்பவர்: அபூஅஸ்ஸா (ரலி)