بَابُ إِذَا لَمْ يُتِمَّ الرُّكُوعَ حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، قَالَ رَأَى حُذَيْفَةُ رَجُلًا لَا يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ، قَالَ: «مَا صَلَّيْتَ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ الفِطْرَةِ الَّتِي فَطَرَ اللَّهُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا»
பாடம் : 119 ருகூவைப் பூரணமாகச் செய்யாவிட்டால் (ஏற்படும் குற்றம்). ஸைத் இப்னு வஹ்பு அறிவித்தார். ருகூவையும் ஸுஜூதையும் பூரணமாகச் செய்யாத ஒரு மனிதரை ஹுதைஃபா(ரலி) கண்டனர். அப்போது அவர்கள் நீர் தொழவே இல்லை. இந்த நிலையில் நீர் மரணித்துவிட்டால் முஹம்மத்(ஸல்) அவர்களின் மார்க்கத்தில் மரணித்தவராக மாட்டீர்’ என்றார்கள். Book : 10