← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #790 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
بَابُ وَضْعِ الأَكُفِّ عَلَى الرُّكَبِ فِي الرُّكُوعِ وَقَالَ أَبُو حُمَيْدٍ فِي أَصْحَابِهِ: «أَمْكَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ مِنْ رُكْبَتَيْهِ» حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي، وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ، «فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ»
பாடம் : 118 ருகூஉவின் போது உள்ளங்கைகளை முழங்கால்கள் மீது வைப்பது. அபூஹுமைத் (அப்துர்ரஹ்மான் அஸ்ஸாஇதீ -ரலி) அவர்கள் தம் தோழர்களிடையே (உரையாற்றுகையில்) நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவில்) தம்மிரு (உள்ளங்)கைகளை முழங் கால்கள் மீது ஊன்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டார்கள். முஸ்அப் இப்னு ஸஃது அறிவித்தார். நான் என்னுடைய தந்தையின் விலாப் பக்கமாக நின்று தொழுதேன். அப்போது ருகூவின்போது என்னுடைய இரண்டு கைகளையும் இரண்டு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். இதை என் தந்தை தடுத்து, ‘நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். அதைவிட்டும் நாங்கள் தடுக்கப்பட்டு எங்கள் கைகளை மூட்டுக்கால்களின் மீது வைக்குமாறு உத்தரவிடப் பட்டோம்’ என்றார். Book : 10