← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #226 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
بَابُ البَوْلِ عِنْدَ سُبَاطَةِ قَوْمٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ كَانَ أَبُو مُوسَى الأَشْعَرِيُّ يُشَدِّدُ فِي البَوْلِ، وَيَقُولُ: ” إِنَّ: بَنِي إِسْرَائِيلَ كَانَ إِذَا أَصَابَ ثَوْبَ أَحَدِهِمْ قَرَضَهُ “ فَقَالَ: حُذَيْفَةُ لَيْتَهُ أَمْسَكَ «أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا» Bukhari-Alamiah- https://sunnah.com/bukhari:226
பாடம் : 62 ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழியில் சிறுநீர் கழித்தல். ‘அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) சிறுநீர் விஷயத்தில் மிகக் கண்டிப்பானவராக இருந்தார். ‘இஸ்ரவேலர் சமூகத்தினரில் யாருடைய ஆடையிலாவது சிறுநீர் பட்டால் அப்பாகத்தைக் கத்தரித்து விடக் கூடியவர்களாக இருந்தார்கள்’ எனக் கூறுவார். ‘அவர் இந்தப் போக்கை மாற்றிக் கொள்ளலாமே’ என ஹுதைஃபா(ரலி) கூறிவிட்டு ‘நபி(ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள்’ என்று கூறினார்’ என அபூ வாயில் அறிவித்தார். Book : 4