ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஆதம் (அலை) அவர்களுக்கு ஸுஜூத் செய்யுமாறு வானவர்களுக்குப் பணித்த இறைவன், இப்லீஸ் ஸுஜூது செய்யாத பொழுது ஏன் அவனைக் குற்றம்

சட்டம்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஆதம் (அலை) அவர்களுக்கு ஸுஜூத் செய்யுமாறு வானவர்களுக்குப் பணித்த இறைவன், இப்லீஸ் ஸுஜூது செய்யாத பொழுது ஏன் அவனைக் குற்றம் பிடித்தான்? இப்லீஸ் மலக் (வானவர்) இல்லையே?
பதில்
பதில்:

அல்லாஹுத்தஆலா இப்லீஸுக்கும் ஸுஜூது செய்யுமாறு கட்டளையிட்டிருந்தான். ஆதம் (அலை) அவர்களுக்கு ஸுஜூது செய்யுமாறு ஏவியதாக குர்ஆனில் சூரத்துல் அஃராஃப் 12-வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

"நான் உனக்கு ஸுஜூது செய்யக் கட்டளையிட்ட பொழுது நீ ஸுஜூது செய்யாமல் இருந்தது ஏன்?" என்று அல்லாஹுத்தஆலா இப்லீஸிடம் கேட்டதாக அந்த வசனத்தில் வருகிறது. எனவே, இப்லீஸுக்கும் கட்டளையிட்ட பின்னால்தான் ஏன் ஸுஜூது செய்யவில்லை என்று இறைவன் கேட்டிருக்கிறான் என்பதை இந்த வசனத்திலிருந்து தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

வீடியோ விளக்கம்
▶ YouTube-ல் காண்க
← முந்தையஅடுதது →