ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஜகாத்துல் ஃபித்ருடைய சட்டங்கள் என்ன? அது எப்படி சேகரிக்கப்பட வேண்டும், எப்படி விநியோகிக்கப்பட வேண்டும், அதனுடைய கால வரைய

ஸகாத்துல் பித்ர் நோன்பு ஸகாத் நேரம்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஜகாத்துல் ஃபித்ருடைய சட்டங்கள் என்ன? அது எப்படி சேகரிக்கப்பட வேண்டும், எப்படி விநியோகிக்கப்பட வேண்டும், அதனுடைய கால வரையறை என்ன?
பதில்
பதில்:

ஹதீஸ்களில் இதற்கு "ஜகாத்துல் ஃபித்ரி மின் ரமழான்" (ரமழானிலிருந்து விடுபடுவதற்கான தர்மம்) என்று பெயர் வந்துள்ளது. நோன்பை முடிக்கும் நேரத்தை 'இஃப்தார்' என்று சொல்வதைப் போல, ரமழான் முழுமையாக முடிந்து மஃரிப் நேரத்திற்குள் நுழையும் அந்த முடிவு நேரத்திற்குத்தான் இது கடமையாகிறது. எனவே, ஏழைகளுக்கு இது கட்டாயம் மஃரிபுக்குப் பின்னால்தான் சென்றடைய வேண்டும்.

ஒருவர் முன்கூட்டியே ரமழானுக்குள்ளேயே ஏழைகளுக்கு இதனைக் கொடுத்துவிட்டால், அது ரமழானில் கொடுக்கப்பட்ட பொதுவான தர்மமாக ஆகுமே தவிர, விடுபடுகின்ற நேரத்தின் கடமையான ஜகாத்துல் ஃபித்ராக அது அமையாது. கடமையாகும் நேரமான மஃரிபிற்குப் பின் ஒருவர் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தாலோ அல்லது அதற்கு முன் மரணித்துவிட்டாலோ அவருக்கு இது கடமையாகாது. இது ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய இறுதி நேரம் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னராகும்.

ஆனால், இந்த ஃபித்ராவை முன்கூட்டியே பொதுமக்களிடம் இருந்து சேகரித்து (Collect) வைப்பது என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதே. நபிகளார் காலத்தில் அபூஹுரைரா (ரழி) அவர்கள் ரமழானிலேயே இதனைச் சேகரித்து வைப்பதற்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட செய்தியை ஸஹீஹுல் புகாரி போன்ற கிரந்தங்களில் பார்க்கிறோம். இவ்வாறு முன்கூட்டியே பொறுப்பாளர்களால் சேகரிக்கப்பட்டாலும், ஏழைகளுக்கு விநியோகிக்கப்படும் நேரம் பெருநாள் இரவின் மஃரிபிலிருந்து பெருநாள் தொழுகைக்கு இடைப்பட்ட நேரமாகவே இருக்க வேண்டும்.

← முந்தையஅடுதது →