ஒரு முஸ்லிம் தன்னைத் தூய்மையான ஒரு முஸ்லிமாக நிரூபிப்பதே மிகச் சிறந்த தஃவாவாகும். நமது தொழுகை, இங்கிதமான நடைமுறை, பேருந்துகளில் மற்றவர்களுக்கு உதவி செய்வது, பெரியவர்களுக்கு இடம் கொடுப்பது, புன்னகையோடு பழகுவது, அண்டை வீட்டாருடன் பேசும் விதம் போன்ற நமது நற்குணங்களும் பண்பாடுகளுமே அவர்களிடத்திலே இஸ்லாம் பற்றிய ஒரு கேள்வியையும் ஈர்ப்பையும் உண்டாக்கும். நமது வாழ்க்கை முறையையே மாற்றி வைத்துவிட்டு வெறும் தத்துவங்களை மட்டும் பேசுவதனால் இஸ்லாம் போய் சேராது.
அவர்களோடு பேசுகின்ற பொழுது, ஒரு சிறந்த அணுகுமுறையாக, "உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? இந்த கயிறு ஏன் கட்டுகிறீர்கள்? இது எதைக் குறிக்கிறது?" என்று அவர்களிடம் முதலில் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் சொல்லும் விளக்கத்தைக் கேட்டுவிட்டு, பின்னர் அதன் ஊடாக நமது மார்க்க விளக்கத்தை அழகாகச் சொல்வது, அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்.