ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

பெருநாள் தொழுகையில் இமாமைப் பின்பற்றித் தொழும் போது, இமாம் ஆரம்பத் தக்பீருடன் சேர்த்து ஏழு தக்பீர்களுக்குப் பதிலாக ஐந்து

பெருநாள் தொழுகை தக்பீர் இமாம் கழா

← முந்தையஅடுதது →
கேள்வி
பெருநாள் தொழுகையில் இமாமைப் பின்பற்றித் தொழும் போது, இமாம் ஆரம்பத் தக்பீருடன் சேர்த்து ஏழு தக்பீர்களுக்குப் பதிலாக ஐந்து அல்லது ஆறு தக்பீர்கள் மட்டுமே சொன்னால், நாம் விடுபட்ட தக்பீர்களை கழா செய்ய வேண்டுமா?
பதில்
பதில்:

பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் தக்பீரத்துல் இஹ்ராமைத் தவிர்த்து மேலதிகமாக ஏழு தக்பீர்கள் சொல்வது சுன்னத்தாகும். ஆனால், இமாம் எத்தனை தக்பீர்கள் சொல்கிறாரோ அத்தனை தக்பீர்களைத்தான் நாமும் பின்பற்ற வேண்டும். இமாம் ஐந்து அல்லது ஆறு தக்பீர்கள் சொன்னாலும் அவர் குற்றவாளியாக மாட்டார்; அவரது தொழுகையும் பிழையாகாது.

ஏனென்றால் ஹதீஸ்கலையில் இந்தத் தக்பீர் எண்ணிக்கைகளில் (ஏழா? ஆறா? என) முரண்பட்ட அறிவிப்புகளும் விமர்சனங்களும் உள்ளன. இமாம் ஒரு தக்பீரை விட்டுவிட்டாலோ அல்லது மறந்துவிட்டாலோ அதற்காக "ஸுப்ஹானல்லாஹ்" என்று சொல்லித் திருத்த வேண்டிய அளவிற்கு அது மார்க்கக் குற்றமும் இல்லை. அதேபோல ஒருவர் நாலாவது தக்பீரில் வந்து ஜமாஅத்தில் சேர்ந்தாலும், அவருக்கு விடுபட்ட அந்த மூன்று தக்பீர்களை கழா செய்ய வேண்டிய அவசியமுமில்லை. எனவே இமாம் எதனைச் செய்கிறாரோ அதனை முழுமையாகப் பின்பற்றுவதே சரியான முறையாகும்.

← முந்தையஅடுதது →