ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

நாற்காலியில் இருந்து தொழுவதன் சட்டம் என்ன? அப்படி நாற்காலியில் தொழுபவர்கள் ஸஃப்பில் (வரிசையில்) எங்கு, எவ்வாறு நிற்க வேண

நாற்காலியில் தொழுதல் ஸஃப் சுன்னத் தொழுகை ஃபர்ளு தொழுகை

← முந்தையஅடுதது →
கேள்வி
நாற்காலியில் இருந்து தொழுவதன் சட்டம் என்ன? அப்படி நாற்காலியில் தொழுபவர்கள் ஸஃப்பில் (வரிசையில்) எங்கு, எவ்வாறு நிற்க வேண்டும்?
பதில்
பதில்:

சுன்னத்தான தொழுகைகளை ஒருவர் நிற்க முடியுமாக இருந்தும் உட்கார்ந்து தொழுதால், நின்று தொழுபவரின் கூலியில் அரைவாசி கூலிதான் கிடைக்கும் (சில ரக்அத்களை நின்றும் சிலவற்றை உட்கார்ந்தும் தொழுவதற்கு சுன்னத்தான தொழுகைகளில் அனுமதியுள்ளது). ஆனால், ஃபர்ளு (கடமையான) தொழுகையைப் பொறுத்தவரை, ஒருவரால் நின்று தொழவே முடியாது என்ற கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே அவர் உட்கார்ந்து தொழ வேண்டும். அப்படி இயலாத நிலையில் ஒருவர் உட்கார்ந்து தொழுதால், அவரது கூலியில் எவ்விதக் குறைவும் ஏற்படாது; முழுமையான கூலி கிடைக்கும்.

தற்போது பள்ளிவாசல்களில் நாற்காலிகள் (Chair), சோபாக்கள் என பெரிய அளவிலான ஆசனங்களை முன்னாலேயே அமைப்பது வழக்கமாகி வருகிறது. நாளைடைவில் நின்று தொழுவது குறைந்து கிறிஸ்தவ ஆலயங்களில் உள்ளதைப்போல முழுவதுமாக நாற்காலிகளை நிரப்பும் நிலை வரக்கூடும் என்பதால் இது வரவேற்கத்தக்க நிலை அல்ல. எனினும், நின்று தொழ முடியாதவர்களுக்கு பள்ளிவாசலில் சாதாரண சேர்களைப் போட்டு வசதி செய்து கொடுப்பது அவசியம்.

நாற்காலியில் தொழுபவர்கள் ஸஃப்பின் (வரிசையின்) முறிவைத் தவிர்க்கும் பொருட்டு, ஸஃப்பின் வலது அல்லது இடது ஓரங்களில் அமர்ந்து தொழுவது சிறந்தது. ஸஃப்பின் நடுவில் நாற்காலியைப் போட்டுத் தொழுதாலும், அவரால் கீழே உட்கார முடியாது என்ற நிலை இருந்தால் அது மார்க்க ரீதியாக பிழையல்ல. அவரது முன் கால் அல்லது பின் கால் ஸஃப்பின் கோட்டைத் தாண்டியே இருக்கும், இது தவிர்க்க முடியாதது என்பதால் அதில் குற்றமில்லை.

← முந்தையஅடுதது →