ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

தத்தெடுத்து வளர்க்கப்பட்டவருக்கு வளர்த்தவரின் சொத்தில் பங்கு உண்டா? தான் வளர்ப்புப் பிள்ளை என்பது தெரியாமல் இருக்கும் ஒர

தத்தெடுத்தல் வளர்ப்பு பிள்ளை சொத்துரிமை வஸிய்யத்

← முந்தையஅடுதது →
கேள்வி
தத்தெடுத்து வளர்க்கப்பட்டவருக்கு வளர்த்தவரின் சொத்தில் பங்கு உண்டா? தான் வளர்ப்புப் பிள்ளை என்பது தெரியாமல் இருக்கும் ஒருவருக்கு இதைத் தெரியப்படுத்தலாமா?
பதில்
பதில்:

தத்தெடுத்து வளர்க்கப்பட்ட பிள்ளை என்ற அடிப்படையில், இஸ்லாமியச் சட்டப்படி வளர்த்தவரின் சொத்தில் பங்கு (வாரிசுரிமை) வராது. சட்ட ரீதியான சிக்கல் வருவதற்கு முன்னால், "நீங்கள் வளர்த்தெடுக்கப்பட்டவர் என்பதால் உங்களுக்கு இதில் வாரிசுரிமைப் பங்கு இல்லை" என்பதை இஸ்லாமிய அடிப்படையில் அவர்களுக்குத் தெரியப்படுத்துவதுதான் மிகவும் பொருத்தமானது. ஆரம்பத்திலேயே அவர் வளர்த்தெடுக்கப்பட்டவர் என்பதைச் சூசகமாகச் சொல்லி, மனரீதியான பாதிப்பு வராமல் வளர்த்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லப்படாததால் இப்போது சொல்வது சிரமமாக இருந்தாலும், கட்டாயம் சொல்லித்தான் ஆக வேண்டும். சொத்தில் வாரிசுரிமைப் பங்கு இல்லை என்றாலும் பாசம் அவர்களோடு இருக்கும்.

தந்தை பங்கு கொடுக்க விரும்பினால், தன் சொத்தில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறைவாக 'வஸிய்யத்' (மரண சாசனம்) செய்து வளர்த்தெடுக்கப்பட்ட பிள்ளைக்குக் கொடுக்கலாம். அல்லது தந்தையின் பெயரில், அந்தப் பிள்ளைகள் ஒரு நிரந்தர அமைப்பில் (தர்மமாக) மூன்றில் ஒரு பங்கை இவருக்குக் கொடுக்கலாம். மற்றபடி அவருக்கு வாரிசுரிமை அடிப்படையில் பங்கு இல்லை என்பதைத் தெரியப்படுத்துவதுதான் பொருத்தமானது.

← முந்தையஅடுதது →