ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

ஜும்ஆ தினத்தில் சூரியன் உச்சி நிலையை அடையும் போது (நண்பகல்) தொழுவதற்கு உள்ள தடையின் மார்க்க சட்டம் என்ன?

தொழுகை தடை நேரம் உச்சிப்பொழுது ஜும்ஆ தினம் சுன்னத்

← முந்தையஅடுதது →
கேள்வி
ஜும்ஆ தினத்தில் சூரியன் உச்சி நிலையை அடையும் போது (நண்பகல்) தொழுவதற்கு உள்ள தடையின் மார்க்க சட்டம் என்ன?
பதில்
பதில்:

பொதுவாக மூன்று நேரங்களில் தொழுவதற்கு இஸ்லாத்தில் தடை உள்ளது: 1. சூரியன் உதிக்கும் நேரம், 2. சூரியன் உச்சியில் இருக்கும் நேரம் (நண்பகல்), 3. சூரியன் மறையும் நேரம்.

ஆனால் ஜும்ஆ தினத்தைப் பொறுத்தவரை, பகல் நேரத்தில் சூரியன் உச்சியில் இருக்கும் போது தொழுவதற்குரிய அந்த தடை கிடையாது (அது விதிவிலக்காகும்) என இமாம் மாலிக், இமாம் ஷாஃபி, இமாம் இப்னு தைமியா போன்ற பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஏனெனில் ரசூல் (ஸல்) அவர்கள் ஜும்ஆ தினத்தில் பள்ளிக்கு முன்கூட்டியே சென்று இமாம் வரும் வரைக்கும் தொழுது கொண்டிருப்பதை மிகவும் ஆர்வமூட்டியுள்ளார்கள். ரசூல் (ஸல்) அவர்கள் உச்சி சாய்வதற்கு முன்னாலும் தொழுதுள்ளார்கள், சாய்ந்த பின்னாலும் தொழுதுள்ளார்கள். எனவே ஜும்ஆ தினத்தில் சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்தில் ஒருவர் பள்ளியில் நஃபில், சுன்னத் தொழுகைகளில் ஈடுபடுவது மார்க்க தடையின்கீழ் வராது.

← முந்தையஅடுதது →