கேள்வி
ஜும்ஆ தினத்தில் பள்ளியில் ஜும்ஆ தொழுகை முடிவதற்கு முன்பாகவே வீடுகளிலுள்ள பெண்கள் ளுஹர் தொழுகையைத் தொழுது கொள்ளலாமா?
பதில்
பதில்:
ஆம், தாராளமாகத் தொழுது கொள்ளலாம். சூரியன் உச்சி சாய்ந்த உடனேயே ளுஹர் தொழுகைக்கான நேரம் வந்துவிடுகிறது. எனவே அதான் சொல்லப்பட்ட உடனேயே, வீடுகளில் உள்ள பெண்கள் தங்களது ளுஹர் தொழுகையை (நான்கு ரக்அத்கள்) நிறைவேற்றிக் கொள்ளலாம்.
பள்ளியில் ஸ்பீக்கர் சத்தம் கேட்பதாலோ, அங்கு ஜும்ஆ தொழுகை முடிவதற்காகவோ அல்லது ஜமாஅத் நடப்பதற்காகவோ அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஜும்ஆ தினத்தில் நிழல் சாய்வதற்கு (உச்சி சாய்வதற்கு) சற்று முன்னால் கூட ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றலாம் என்று ஹதீஸ்கள் இருப்பதால், நேரம் வந்தவுடனேயே பெண்கள் வீடுகளில் தொழுது கொள்வது முற்றிலும் அனுமதிக்கப்பட்டதே.