இஸ்லாம் சொல்லக்கூடிய இரண்டு வருடம் தாய்ப்பால் கொடுப்பதுதான் குழந்தைக்கு மிகவும் சிறந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் கொடுப்பதைத் தவிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒன்று, தாய்க்கு அடுத்த குழந்தை உருவாகலாம். இரண்டாவது, குழந்தை தொடர்ச்சியாகத் தாய்ப்பாலையே பழகினால் மற்ற திட உணவுகளுக்கு மாறுவது கடினமாகிவிடும், அது குழந்தையின் உடல்நிலையைப் பாதிக்கலாம். மூன்றாவது, மூன்று வயது நெருங்கும்போது குழந்தைக்கு அனைத்தையும் புரிந்து கொள்ளும் உணர்வு வந்துவிடும். எனவே இஸ்லாம் சொல்லும் அந்த இரண்டு வருடம் என்பதுதான் மிகவும் பொருத்தமான அளவுகோலாகும்.
இருப்பினும், குழந்தைக்குத் தாய்ப்பாலை மறக்கடிப்பதற்கான முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அது கொஞ்சம் தாமதமாகி இரண்டு மாதமோ, நான்கு மாதமோ, ஆறு மாதமோ கூடிவிட்டால் அது மார்க்க ரீதியாகத் தடை செய்யப்படவில்லை. ஆனால், நாங்களாகவே முடிவு செய்து "மூன்று அல்லது நான்கு வருடங்கள் தாய்ப்பால் கொடுப்பேன்" என்று பர்பஸாக (purposefully) நீட்டுவது பிழையான ஒரு அணுகுமுறையாகும்.