ஒரு குடும்பத்தில் உள்ள எல்லாருக்குமே நல்ல பணம் இருக்கிறது என்பதற்காக, அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாக உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும் என்று நினைப்பது பிழை. அது இஸ்ராஃப் (வீண்விரயம்). இஸ்லாம் வெறுத்த ஒரு விஷயம்.
ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் தன் மனைவிமார்கள் அனைவருக்கும் சேர்த்து ஒரு மாட்டை அறுத்தார்கள் என்ற செய்தியைப் பார்க்கிறோம். அதுபோலவே குர்பானியாக இரண்டு ஆடுகளை அறுத்தார்கள். எனவே, ஒருவர் கொடுப்பதற்கு வசதி இருந்து தனது குடும்பத்துக்காக ஒரு ஆட்டையோ அல்லது இரண்டு ஆடுகளையோ குர்பானி கொடுத்தால் பிழை இல்லை. அல்லது ஒரு மாடு கொடுத்தால் பிழை இல்லை. ஆனால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்தவரும் தனித்தனியாக ஆளுக்கு ஒன்று கொடுக்க வேண்டும் என்று நினைப்பது இஸ்லாத்தில் இல்லாத ஒரு வழமை.
இதனால்தான் இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உழ்ஹிய்யா கொடுப்பதையே தவிர்த்தார்கள்; ஏனென்றால் மக்கள் ஒவ்வொருவரும் பெருமைக்காக தனித்தனியாக கொடுக்க ஆரம்பித்தார்கள். இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும் இது இஸ்ராஃப் (வீண் விரயம்) என்று சொல்கிறார்கள். எனவே ஒரு குடும்பத்திற்கு ஒரு குர்பானியே போதுமானது, அதை நாம் வீண்விரயமாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.