ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

குடும்ப வாழ்க்கையில் சேர்ந்த (தாம்பத்தியத்தில் ஈடுபட்ட) பின்னர்தான் வலீமா கொடுக்க வேண்டுமா?

வலீமா திருமணம் கணவன் மனைவி குடும்ப வாழ்க்கை

← முந்தையஅடுதது →
கேள்வி
குடும்ப வாழ்க்கையில் சேர்ந்த (தாம்பத்தியத்தில் ஈடுபட்ட) பின்னர்தான் வலீமா கொடுக்க வேண்டுமா?
பதில்
பதில்:

ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் யாரிடத்திலும் வலீமா கொடுங்கள் என்று சொல்கின்ற நேரத்தில், அவர்களது இரவு ஒன்று கூடலைப் பற்றியோ அல்லது அவர்கள் தாம்பத்தியத்தில் சேர்ந்தார்களா இல்லையா என்பதைப் பற்றியோ விசாரித்ததில்லை. வலீமா கொடுப்பதற்கு அவர்கள் ஒரு இரவைக் கடத்தினார்களா என்ற ஒரு கேள்வியை ரசூலுல்லாஹ் கேட்டதில்லை.

எனவே, தாம்பத்தியத்தில் சேர்ந்த பின்னால்தான் வலீமா கொடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அது வாஜிப் என்பதற்கு எந்தவிதமான ஆதாரத்தையும் காட்டவில்லை. தாராளமாக வலீமா என்பதை கணவன்-மனைவி சேர்வதற்கு முன்னாலோ அல்லது சேர்ந்த பின்னாலோ என்ன வேண்டுமானாலும் கொடுக்கலாம். இதிலே எந்தவிதமான நிர்ப்பந்தத்தையும் இஸ்லாம் எங்களுக்கு ஏற்படுத்தவில்லை.

← முந்தையஅடுதது →