உயிருள்ள உருவங்களை தங்கள் கைகளால் வரைவது மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்ட (தடைசெய்யப்பட்ட) ஒரு செயலாகும். "உருவம் வரைபவர்கள் நாளை மறுமையில் கடுமையாக வேதனை செய்யப்படுவார்கள்" என்றும், "அவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்கு உள்ளாவார்கள்" என்றும் ஹதீஸ்கள் வன்மையாக எச்சரிக்கின்றன.
இலங்கை போன்ற நாடுகளில் உள்ள சில முஸ்லிம் பாடசாலைகளிலேயே, சித்திரம் வரைவதைக் கட்டாயப்படுத்துகிறார்கள். உண்மையில், ஒரு மாணவன் சித்திரம் வரையவில்லை என்றால் அவனைப் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவார்கள் என்ற எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. எத்தனையோ பாடங்களை மாணவர்கள் படிக்காமல் விடுவதுண்டு. ஆனால், இஸ்லாமிய அடிப்படையில் நடக்கத் தவறிய சில முஸ்லிம் நிர்வாகிகளே, "என் பிள்ளை சித்திரம் வரைவதில் திறமையானவன்" என்று நிரூபிப்பதற்காக மார்க்கம் தடுத்த இந்த பாவமான செயலை ஊக்குவிக்கிறார்கள். பெற்றோரும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.
விளையாடுவதற்காகவோ அல்லது படிப்பதற்காகவோ ஏற்கனவே வரையப்பட்ட உருவப் பொம்மைகளைப் பயன்படுத்துவது வேறு; ஆனால் தங்கள் கைகளால் உயிருள்ள உருவங்களை வரைவது என்பது முற்றுமுழுதாகக் கூடாத ஒரு செயலாகும். இது முற்றுமுழுதாகத் தவிர்க்கப்பட வேண்டும்.