ஒருவர் குளிப்பு கடமையான நிலையில் மரணிப்பதை இரண்டு நிலைகளாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்:
1. கடமையைப் புறக்கணித்த நிலை:
ஒருவர் குளிப்பு கடமையாக இருந்து, அதற்கான நேரம் இருந்தும், பஜ்ர் அல்லது ளுஹர் போன்ற கட்டாயத் தொழுகைகளைத் தவறவிடும் அளவுக்குக் குளிக்காமல் தாமதப்படுத்தி மரணித்தால், அவர் நிச்சயமாக ஒரு பெரும் பாவியாவார். அல்லாஹ்விடம் அவர் தண்டனைக்குரிய குற்றவாளியாவார்.
2. தொழுகை நேரம் வராத நிலை:
தொழுகைக்கான நேரத்தை அடைவதற்கு முன்னரே (அதாவது கடமையைத் தவறவிடாத ஒரு இடைப்பட்ட நேரத்தில்) ஒருவர் குளிப்பு கடமையான நிலையில் மரணிக்கிறார் என்றால், இது வரவேற்கத்தக்க நிலை இல்லாவிட்டாலும், இது பாவமான நிலை கிடையாது.
"ஒரு மனிதன் தான் மரணித்த நிலையிலேயே எழுப்பப்படுவான்" என்று ரசூல் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதன் அர்த்தம், ஒருவன் ஷஹீதாக மரணித்தால் அந்தச் சிறப்போடு எழுப்பப்படுவான் என்பது போன்ற அவனது அந்தஸ்தைக் குறிப்பதே தவிர, குளிப்பு கடமையானவர் அதே அசுத்தத்தோடு (நஜீஸோடு) எழுப்பப்படுவார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே, ஒரு பாவம் நிகழும் அளவுக்கு கடமையைப் பிற்படுத்தாமல் இருப்பதுதான் முக்கியமே தவிர, இடைப்பட்ட நேரத்தில் குளிப்பு கடமையாக இருந்தபடியே மௌத்தாவது மறுமையில் அவரை அசுத்தவாளியாக ஆக்காது.